ஊற்று எழுதுகோல்

ஊற்று எழுதுகோல் (fountain pen) என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஓர் எழுதுகோல் ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் நனை எழுதுகோல் (Dip Pen) ஆகும். நனை எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை மையில் நனைக்கவேண்டி இருந்தது. இது சிரமத்தைத் தந்ததால் 1884ஆம் ஆண்டில் எல். ஈ. வாட்டர்மேன் என்ற அமெரிக்கர் இந்தப் புதிய முறையைக் கண்டுபிடித்தார். இதில் உள்ள குப்பியில் நீரை ஆதாரமாகக் கொண்ட மையை நிரப்பி அங்கிருந்து மையை எழுதுகோலின் முனைக்குக் கொண்டுவருவது தான் இந்தப் புதிய முறை. இதன் முனையில் உலோகத்தாலான முள் (Nib) பொருத்தப்பட்டிருக்கும். இம்முள்ளின் நடுவில் ஒரு சிறிய பிளவு இருக்கும். இப்பிளவில் தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக மை தாளினை அடைந்து எழுதப் பயன்படுகிறது.

ஊற்று எழுதுகோல்

முள்

ஊற்று எழுதுகோலின் முள்

ஊற்று எழுதுகோலின் முனையில் உள்ள முள் துருபிடிக்காத எஃகு அல்லது தரங்குறைந்த தங்கப்பூச்சுக்கொண்டு இந்த முள் தயாரிக்கப்படுகிறது. இந்த முள்ளைக் காகிதத்தின் மீது அழுத்தி எழுதுவதால் நீண்ட காலம் உழைக்கவேண்டி பிளாட்டினம் போன்ற உலோகத்தை உருக்கி அதில் இந்த முள்ளின் முணையை முக்கி எடுத்து வலிமை கூட்டுகிறார்கள்.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.