உயிரளபெடை
உயிரளபெடை [1] என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். [2] உயிரெழுத்துக்களில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துக்களுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர். [3]
அளபெடுகும் எழுத்துக்கள்
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும்.
எடுத்துக்காட்டு | அளபெடுத்த எழுத்து | அளபெடுத்துள்ள பாங்கு | குறிப்பு |
---|---|---|---|
பாஅல் புளிப்பினும் (பெயர்ச்சொல்), [4], புகாஅர் (வினைமுற்று) [5], புகாஅர்த் தெய்வம் (ஊர்) [6], ஆஅய் (அரசன்) [7] | ஆஅ | பால் - பாஅல் | செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை |
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர், படாஅஅ முலைமேல் துகில் [8] | ஆஅஅ | கடா - கடாஅ, படா - படாஅஅ | செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை |
பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல [9] | ஈஇ | குருவி - குரீஇ | சொல்லிசை அளபெடை |
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் [10] | ஊஉ | உடுப்பதும் - உடுப்பதூஉம், உண்பதும் - உண்பதூஉம் | அளபெடுக்காவிட்டாலும் செய்யுளில் தளை தட்டாது ஆகையால் இன்னிசை அளபெடை |
பேஎம் முதிர், மன்றத்து [11] | ஏஎ | பேம் - பேஎம் [12] | இன்னிசை அளபெடை |
இன்சொலால் ஈரம் அளைஇ [13] | ஐஇ | அளவி - அளைஇ | சொல்லிசை அளபெடை |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, [14] | ஓஒ | கோல் - கோஒல் | செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை |
- | ஔஉ | - | - |
அளபெடுக்கும் இடங்கள்
மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.:
எடுத்துக்காட்டு:
1 | ஓஒதல் வேண்டும் | முதல் |
2 | கெடுப்பதூஉம் கெட்டார்க்கு | இடை |
3 | நல்ல படாஅ பறை | கடை |
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம்.
ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.
அளபெடைப் பெயர்
இந்தச் சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக் குறிப்பிடுகிறது. [17]
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- முனை. நல்லாமூர் கோ. பெரியண்ணன், அடிப்படை எளிய தமிழ் இலக்கணம், வனிதா பதிப்பகம், சென்னை-17, முதல் பதிப்பு 2003
அடிக்குறிப்பு
- உயிர் + அளபு + எடை(=எடுத்தல்)
- ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து அளபெடுத்து வருதல்.
-
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ -நன்னூல் - புறநானூறு 2
- குறுந்தொகை 130
- அகம் 110
- நற்றிணை 167
- திருக்குறள் 1087
- நற்றிணை 58
- திருக்குறள் 166
- பட்டினப்பாலை 255
- அச்சம்
- திருக்குறள் 91
- புறநானூறு 117
- ஆடூஉ முன்னிலை
- மகடூஉ முன்னிலை
- ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும் (தொல்காப்பியம், 2-163 பெயரியல்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.