உடம்படுமெய்
தமிழ் மொழியில் சொல்லோடு சொல் சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். உயிர் எழுத்தில் முடியும் சொல்லோடு உயிரெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொல் வந்து சேரும்போது இடையே ய, வ ஆகிய இரண்டு எழுத்துக்களை ஆசாகக் கொள்ளும். [1][2] இவை இரண்டையும் அரையுயிர் என இலக்கண நூலார் குறிப்பது வழக்கம்.
ஒலி இயல்பு
அண்மைக் காலம் வரையில் திண்ணைப் பள்ளிகளில் எழுத்துக்களை ஓசையுடன் கற்பித்துவந்தனர். அவற்றில் இந்த உடம்படுமெய் பிறப்பதைக் காணலாம்.
அ - ஆனா
ஆ - ஆவன்னா
இ - ஈனா
ஈ - ஈயன்னா
உ- ஊனா
ஊ - ஊவன்னா
எ - ஏனா
ஏ - ஏயன்னா
ஐ - ஐயன்னா
ஒ - ஓனா
ஓ - ஓவன்னா
ஔ - ஔவன்னா
இவற்றில் நெடில் எழுத்துக்களோடு இணைந்துள்ள எழுத்துக்களைக் கழுத்தில் கொண்டு நன்னூல் உடம்படுமெய் எழுத்துக்களைப் பாகுபாடு செய்து காட்டுகிறது.
பொருள் இயல்பு
மா, (விலங்கு), (பொருட்பெயர்) | மாவன்று | ஆவன்னா வாய்பாட்டு நெறி |
மா, (பெரிய), (உரிச்சொல்) | மாயிரு ஞாலம் | இயல்பு மாற்றம் |
ஆ, (பசு), (பொருட்பெயர்) | ஆவன்று | ஆவன்னா வாய்பாட்டு நெறி |
ஆ, (சுட்டெழுத்து அ நீண்டு நிற்றல் | ஆயிடை | இயல்பு மாற்றம் |
- பொருட்பெயருக்கு வாய்பாட்டு நெறியில், அதாவது இயல்பு நெறியில், அதாவது நன்னூல் வரையறை நெறியில் உடம்படுமெய் தோன்றும்.
- பொருட்பெயர் அல்லாத சொல்லுக்கு, பொருள் உணருத்துவதற்காக, இயல்பு நெறியை மாற்றி உடம்படுமெய் அமைக்கப்படும். இது பொருட்புணர்ச்சி
அடிக்குறிப்பு
-
எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். தொல்காப்பியம் புணரியல் 38 -
இஈ ஐவழி யவ்வு மேனை
யுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும். - நன்னூல் 162
வெளிப் பார்வை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.