இளவெயினி

பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர் இவர். குறவர் சமுதாயத்தில் பிறந்த இவர் போர்க்களத்தில் பிணந்திண்ணும் பேய் மகளிரை வியந்து பாடிய சிறப்பால் “பேய்மகள்” என்கிற சிறப்புப் பெயருடன் பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய பாடல் ஒன்று (பாடல்:11) மட்டும் புறநானூற்றில் காணப்படுகிறது. பிற பாடல்கள் கிடைக்கவில்லை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.