இலங்கை வானொலி நாடகத்துறை
1925 ஆம் ஆண்டளவிலே இலங்கை வானொலியிலே தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பப்படலாயின என்பதைக் கலையரசு க. சொர்ணலிங்கத்தின் நூல் வாயிலாக அறியலாம். எனினும் வானொலியை நாடக அரங்கேற்ற சாதனமாக முழுமையாய்ப் பயன்படுத்திய காலம் 1940 ஆம் ஆண்டின் பின்னரேயாகும்.
1950ல் இலங்கை வானொலி நாடக தயாரிப்பாளராக சானா (சண்முகநாதன்) அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தான் வானொலி நாடகத்துறை சீர்பெற்றது. அக்காலத்தில் வானொலி நாடகங்கள் எழுதும் திறமை பெற்ற ஒரு சில எழுத்தாளருள் இலங்கையர்கோன் குறிப்பிடத்தக்கவர். இவர் வானொலிக்கு எழுதிய மிஸ்டர் குகதாசன், மாதவி மடந்தை விதானையார் வீட்டில், லண்டன் கந்தையா ஆகியன புகழ் பெற்றன. ஆரம்ப காலத்தில் வானொலி நாடகங்கள் ஒலிப்பதிவு செய்யப்படாமல் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டன.
கிராமிய சேவை
கிராமிய நாடகங்கள் இச்சேவையில் பொருத்தமாக ஒலிபரப்பட்டன. வி. என். பாலசுப்பிரமணியம், சு. வேலுப்பிள்ளை (சு. வே)., எஸ். ஜேசுரட்னம் முதலானோர் தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுத, வீ. ஏ. சிவஞானம் முதலானோர் தயாரித்து வழங்கினார்கள்.