இலங்கை மீயுயர் நீதிமன்றம்
இலங்கை மீயுயர் நீதிமன்றம் (Supreme Court of Sri Lanka) என்பது இலங்கையின் உச்ச நீதிமன்றம் ஆகும். இலங்கையின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கு இந்த நீதிமன்றமே இறுதி மேன்முறையீட்டு அதிகாரவரம்பைக் கொண்டுள்ளது.
இலங்கை மீயுயர் நீதிமன்றம் Supreme Court of Sri Lanka | |
---|---|
நீதிமன்ற வளாகம் | |
நிறுவப்பட்டது | 1801 |
அதிகார எல்லை | இலங்கை |
அமைவிடம் | புதுக்கடை, கொழும்பு |
நியமன முறை | அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் இலங்கை சனாதிபதியினால் நியமனம் |
அதிகாரமளிப்பு | இலங்கையின் அரசியலமைப்பு |
நீதியரசர் பதவிக்காலம் | அகவை 65 வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | பிரதம நீதியரசர் உட்பட 6 - 10 |
வலைத்தளம் | இலங்கையின் மீயுயர் நீதிமன்றம் |
குறிக்கோளுரை | |
"பொது மக்களின் நம்பிக்கைக்கும் பற்றுறுதிக்கும் ஊக்கமூட்டல்" "Inspire public trust and confidence" | |
இலங்கையின் பிரதம நீதியரசர் | |
தற்போதைய | கனகசபாபதி சிறீபவன் |
பதவியில் | 30 சனவரி 2015 |
வரலாறு
இலங்கை மீயுயர் நீதிமன்றம் 1801 ஏப்ரல் 18 ஆம் நாள் பிரித்தானியரால் "மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க நிறுவப்பட்டது.[1][2]
அமைப்பு
மீயுயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர், மற்றும் ஆறு முதல் 10 வரையிலான நீதியரசர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இலங்கை சனாதிபதியின் (அரசுத்தலைவர்) பரிந்துரையின் பேரில் அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் இலங்கை சனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
- "Chapter X". Transition To British Administration 1796-1805. Lakdiva Books. பார்த்த நாள் 23 சூன் 2011.
- இலங்கை மீயுயர் நீதிமன்றம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.