இரும்பை

இரும்பை என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் விரான் (விராஅன்). இவன் இரவலர்க்குத் தேர் வழங்கும் வள்ளல்.

பரணர் - நற்றிணை 350 குறிப்பிடுகிறது.

தலைவியின் தோள் இரும்பை போல் அழகானது.
இங்குள்ள மக்கள் நெல் அறுக்கும்போது தண்ணுமைப் பறை முழக்குவார்களாம். அதைக் கேட்டு வயல்களில் மேயும் பறவைகள் பறந்தோடி அங்குள்ள மருத மரத்தில் குந்துமாம். அப்போது மருதப் பூங்கொத்துகள் சிதறுமாம்,

ஓரம்போகியார் - ஐங்குறுநூறு 58 குறிப்பிடுகிறது.

இங்குள்ள வயல்களில் நெல் மூங்கில் போல் உயர்ந்து வளருமாம். (இக் குறிப்பு மிகை என்றாலும் இது நெல்வளம் மிக்க ஊர் எனத் தெரியவருகிறது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.