இடைநிலை

தனிச்சொல்லில் பகுதி முதலிலும், விகுதி இறுதியிலும் நிற்கும். இந்தப் பகுப்புக்குப் பின்னர் இடையில் நிற்பது இடைநிலை. [1] வினைச்சொல்லில் இது காலம் காட்டும். பெயர்ச்சொல்லில் ந், ஞ் முதலான எழுத்துக்களாய் வரும். தொல்காப்பியம் இதனைக் காலம் காட்டும் இடைச்சொல் என்று குறிப்பிடுகிறது. [2] [3] நன்னூல் இதனைப் பகுபத உறுப்புக்களில் ஒன்றாகக் காட்டுகிறது.

முக்கால இடைநிலை [4]

இறந்த காலம்த் [5]ட் [6] [7]ற் [8] [9]
நிகழ்காலம்ஆநின்று [10]கிறு [11]கின்று [12]இன்று [13]
எதிர்காலம்[14][15]
  • ஒவ்வொரு சொல்லையும் நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தோம், நடந்தாய், நடந்தீர் என்பது போல ஐம்பால் மூவிடங்களுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெயர் இடைநிலை

  • 'ஞ்' - அறிஞன் [16]
  • 'ந்' - பொருநன் [17]
  • 'வ்' - ஓதுவான் [18] [19]
  • ‘ப்’ - காண்பான் [20] [21]
  • 'ச்' - வலைச்சி [22]
  • ’த்’ - வண்ணாத்தி [23] செக்காத்தி [24]

வெளிப் பார்வை

அடிக்குறிப்பு

  1. நன்னூல் 141
  2. தொல்காப்பியம் வினையியல் 1 முதல் 4
  3. தொல்காப்பியம் இடையியல் 2
  4. நன்னூல் 142, 143, 144
  5. நடந்தான் = நட + ந்(த்) + த் + ஆன்
  6. கொண்டான் = கொள் + ட் + ஆன்
  7. விட்டான் = விடு(விட்டு) + ட் + ஆன்
  8. சென்றான் = செல் + ற் + ஆன்
  9. பெற்றான் = பெறு(பெற்று) + ற் +ஆன்
  10. உண்ணாநின்றான் = உண் + ஆநின்று + ஆன்
  11. உண்கிறான் = உண் + கிறு + ஆன்
  12. உண்கின்றான் = உண் + கின்று + ஆன்
  13. செல்கின்றான் என்பதை மொழியியலாளர் = செல்கு + இன்று + ஆன் என்று பிரித்துக் காட்டி, இன்று என்னும் சொல் இன்றும் நிகழ் காலத்தைச் சுட்டுவதைச் சான்றாகக் கொள்வர் (டாக்டர் மு. வரதராசனார் - மொழிநூல்)
  14. உண்பான் = உண் + ப் + ஆன்
  15. உறங்குவான் = உறங்கு + வ் + ஆன்
  16. அறி + ஞ் + அன்
  17. பொரு + ந் + அன்
  18. ஓது + வ் + ஆன்
  19. வினையாலணையும் பெயர்
  20. காண் + ப் + ஆன்
  21. வினையாலணையும் பெயர்
  22. வலை + ச் + ச் + இ
  23. வண்ணம் + ஆ + த் + த் + இ
  24. செக்கு + ஆ + த் + த் + இ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.