இடைநிலை
தனிச்சொல்லில் பகுதி முதலிலும், விகுதி இறுதியிலும் நிற்கும். இந்தப் பகுப்புக்குப் பின்னர் இடையில் நிற்பது இடைநிலை. [1] வினைச்சொல்லில் இது காலம் காட்டும். பெயர்ச்சொல்லில் ந், ஞ் முதலான எழுத்துக்களாய் வரும். தொல்காப்பியம் இதனைக் காலம் காட்டும் இடைச்சொல் என்று குறிப்பிடுகிறது. [2] [3] நன்னூல் இதனைப் பகுபத உறுப்புக்களில் ஒன்றாகக் காட்டுகிறது.
முக்கால இடைநிலை [4]
இறந்த காலம் | த் [5] | ட் [6] [7] | ற் [8] [9] | |
நிகழ்காலம் | ஆநின்று [10] | கிறு [11] | கின்று [12] | இன்று [13] |
எதிர்காலம் | ப [14] | வ [15] |
- ஒவ்வொரு சொல்லையும் நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தோம், நடந்தாய், நடந்தீர் என்பது போல ஐம்பால் மூவிடங்களுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெயர் இடைநிலை
வெளிப் பார்வை
- இறந்த கால இடைநிலை
- நிகழ் கால இடைநிலை
- எதிர் கால இடைநிலை
- பெயர் இடைநிலை
அடிக்குறிப்பு
- நன்னூல் 141
- தொல்காப்பியம் வினையியல் 1 முதல் 4
- தொல்காப்பியம் இடையியல் 2
- நன்னூல் 142, 143, 144
- நடந்தான் = நட + ந்(த்) + த் + ஆன்
- கொண்டான் = கொள் + ட் + ஆன்
- விட்டான் = விடு(விட்டு) + ட் + ஆன்
- சென்றான் = செல் + ற் + ஆன்
- பெற்றான் = பெறு(பெற்று) + ற் +ஆன்
- உண்ணாநின்றான் = உண் + ஆநின்று + ஆன்
- உண்கிறான் = உண் + கிறு + ஆன்
- உண்கின்றான் = உண் + கின்று + ஆன்
- செல்கின்றான் என்பதை மொழியியலாளர் = செல்கு + இன்று + ஆன் என்று பிரித்துக் காட்டி, இன்று என்னும் சொல் இன்றும் நிகழ் காலத்தைச் சுட்டுவதைச் சான்றாகக் கொள்வர் (டாக்டர் மு. வரதராசனார் - மொழிநூல்)
- உண்பான் = உண் + ப் + ஆன்
- உறங்குவான் = உறங்கு + வ் + ஆன்
- அறி + ஞ் + அன்
- பொரு + ந் + அன்
- ஓது + வ் + ஆன்
- வினையாலணையும் பெயர்
- காண் + ப் + ஆன்
- வினையாலணையும் பெயர்
- வலை + ச் + ச் + இ
- வண்ணம் + ஆ + த் + த் + இ
- செக்கு + ஆ + த் + த் + இ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.