ஆருஷி கொலை வழக்கு
நொய்டா இரட்டைக் கொலை வழக்கு அல்லது ஆருஷி கொலை வழக்கு மே 15-16, 2008 அன்று தில்லி அருகில் உள்ள நொய்டாவில் மருத்துவர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் ஆகியோரின் வீட்டில் நடந்த இரட்டைக் கொலைகள் குறித்த வழக்கு ஆகும்.
நொய்டா இரட்டை கொலை வழக்கு | |
---|---|
இடம் | நொய்டா, இந்தியா |
நாள் | மே 15, 2008 | - மே 16, 2008
தாக்குதல் வகை | கொலை |
ஆயுதம் | குழிப்பந்துத் தடி, அறுவைச் சிகிச்சை கருவி |
இறப்பு(கள்) | 2 |
தாக்கியோர் | ராஜேஷ் தல்வார் நுபுர் தல்வார் |
சம்பவம்
மருத்துவர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் ஆகியோரின் 14 வயது மகள் ஆருஷி தல்வார் என்பவரும், அவர்கள் வீட்டு வேலையாளும் (45 வயதான ஹேமராஜ் பன்ஷாட்ம் (Hemraj Banjade)) மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்துகிடந்தனர்.
வழக்கு
இவ்வழக்கில் சம்பவம் நடந்த அங்கு வந்த நொய்டா காவற்துறை, வீட்டு வேலையாளான ஹேமராஜ் நேபாளிதான் கொலையாளி எனக் கூறியது. ஆனால் மறுநாள் ஹேமராஜ், தல்வார் வீட்டின் மேல்மாடியில் இறந்து கிடந்தது தெரிந்தது. மே 23, 2008-ல் ராஜேஷ் தல்வார்தான் அவரது மகள் ஆருஷியைக் கொன்றார் எனக் கைது செய்து செய்யப்பட்டார்.

2013 நவம்பரில், 5 ஆண்டுகள் கழித்து டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் குற்றவாளிகள் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[1]
வழக்கின் தொடர்
- 16. 05. 2008 ஆருஷி கொலை.
- 17. 05. 2008 வேலைக்காரர் ஹேம்ராஜ் உடல் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 19. 05. 2008 வேலைக்காரர் விஷ்ணு சர்மா கைது.
- 21. 05. 2008 காவல்துறை விசாரணை துவக்கம்.
- 22. 05. 2008 ஆருஷியின் பெற்றோரிடம் விசாரணை.
- 23. 05. 2008 ராஜேஷ் தல்வார் கைது.
- 01. 06. 2008 வழக்கை சிபிஐ விசாரணை.
- 20. 06. 2008 ராஜேஷ் தல்வாரிடம் உண்மை கண்டறியும் சோதனை
- 25. 06. 2008 ஜூன் 25: நூபுர் தல்வாரிடம் உண்மை கண்டறியும் சோதனை.
- 12. 07. 2008 ராஜேஷ் தல்வார் ஜாமீன்.
- 29. 12. 2008 வேலைக்காரர்கள் விடுவிப்பு. தல்வார் தம்பதி மீது குற்றம், வழக்கு முடிப்பதாக சிபிஐ அறிவிப்பு.
- 25. 01. 2011, தல்வார் தம்பதி மீது கொலை வழக்கு, மற்றும் ஆதாரங்களை அழித்த வழக்கு காஜியாபாத் நீதிமன்றம் பதிவு செய்து விசாரணை நடத்த கட்டளை.
- 18. 03. 2011 தல்வார் தம்பதிகளின் மேல் முறையீட்டு மனு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.
- 06. 01. 2012 தல்வார் தம்பதிகளின் மனுஉச்சநீதிமன்றத்தில் ரத்து.
- 10. 10. 2013 தல்வார் தம்பதிகளின் மீது இறுதி கட்ட விசாரணை.
- 25. 11. 2013 தல்வார் தம்பதி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.[2]
- 26. 11. 2013 தல்வார் தம்பதிகளுக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு.[3]