ஆம்பல் பண்
ஆம்பல் பண் என்பது ஒருவகைப் பண்ணாகும்[இராகம்].[1] சங்க இலக்கியங்களில் இப்பண்ணைப் பற்றிய செய்திகள் காணப் பெறுகின்றன. முல்லை நில மக்களாகிய கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற தாள இசைக்கருவிகளுடன் மாலைக் காலத்தில் ஆம்பல் பண்ணை இசைத்து மகிழ்கின்றனர் என நற்றிணை கூறுகிறது.
“ | "ஆம்பலங் குழலின் ஏங்கி"[2] | ” |
பசுக்களை ஓட்டி வரும் இடையர்களின் ஆம்பல் பண்ணுடன் சேர்ந்து யாழில் செவ்வழிப் பண்ணுக்கு மெருகூட்டினார்கள் என்பதை
“ | "ஆபெயர் கோவலர் ஆம்பல் ஒடு அளைஇ
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப"[3] |
” |
என்று அகநானூறு குறிப்பிடுகின்றது. மேலும் ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகியவற்றிலும் சிலப்பதிகாரத்திலும் ஆம்பல் பண் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
மேற்கோளும் குறிப்புகளும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.