ஆம்பல் பண்

ஆம்பல் பண் என்பது ஒருவகைப் பண்ணாகும்[இராகம்].[1] சங்க இலக்கியங்களில் இப்பண்ணைப் பற்றிய செய்திகள் காணப் பெறுகின்றன. முல்லை நில மக்களாகிய கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற தாள இசைக்கருவிகளுடன் மாலைக் காலத்தில் ஆம்பல் பண்ணை இசைத்து மகிழ்கின்றனர் என நற்றிணை கூறுகிறது.

"ஆம்பலங் குழலின் ஏங்கி"[2]

பசுக்களை ஓட்டி வரும் இடையர்களின் ஆம்பல் பண்ணுடன் சேர்ந்து யாழில் செவ்வழிப் பண்ணுக்கு மெருகூட்டினார்கள் என்பதை

"ஆபெயர் கோவலர் ஆம்பல் ஒடு அளைஇ

பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப"[3]

என்று அகநானூறு குறிப்பிடுகின்றது. மேலும் ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகியவற்றிலும் சிலப்பதிகாரத்திலும் ஆம்பல் பண் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

மேற்கோளும் குறிப்புகளும்

  1. "இசைக்கலை". பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  2. நற்றிணை : 123: 10
  3. அகநானூறு: 214: 10 - 11
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.