ஆம்பல் (அணிகலன்)

ஆம்பல் என்பது சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் அணியும் ஒருவகை வளையல் ஆகும். இந்த அணிகலன் இயற்கையாக மலர்ந்த ஆம்பல் மலரால் ஆனதாக இருந்திருக்கலாம். [1] ஆம்பல் அணிகலனாகிய (வள்ளி) வளையலை அணிந்த மகளிர் குன்றுகளில் ஏறி நீரில் பாய்ந்து விளையாடியதை பரணர் என்ற சங்கப்புலவர்

"ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்

குன்று ஏறிப் புனல் பாயின்"[2]

எனப் புறநானூறில் பாடியுள்ளார்.

மேற்கோளும் குறிப்புகளும்

  1. தமிழரசி (11, மே 2012). "ஆம்பல்". மூல முகவரியிலிருந்து 2012-12-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  2. புறநானூறு: 352, 5-6
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.