ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). தமிழக எழுத்தாளராகிய இவரது வசிப்பிடம் ஒசூர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவராகவும் பணியாற்றிவருகிறார். புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.

ஆதவன் தீட்சண்யா
வெளியாகியுள்ள நூல்கள்
கவிதைத் தொகுப்புகள்
- புறத்திருந்து
- பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்
- தந்துகி
- ஆதவன் தீட்சண்யா கவிதைகள்
- மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்
சிறுகதைகள்
- எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்
- இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
- ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்
- லிபரல்பாளையத்துக் கதைகள்
- நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்
புதினங்கள்
- மீசை என்பது வெறும் மயிர்
கட்டுரைகள்
- இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு
- ஆகாயத்தில் எறிந்த கல்
- ஒசூர் எனப்படுவது யாதெனின்
- இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமி
- எஞ்சிய சொல்
- தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை
நேர்காணல்கள்
- நான் ஒரு மநுவிரோதி
திரைத்துறையில்
- காலா
- இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.