அவ்வை தமிழ்ச் சங்கம்
அவ்வை தமிழ்ச் சங்கம் என்பது இந்தியத் தலைநகர் டெல்லியை அடுத்த நோய்டாவில் கிரேட்டர் நொய்டா, நொய்டா, வசுந்தரா, மயூர் விகார், இந்திராபுரம் மற்றும் காஜியாபாத் வாழ் தமிழ் மக்களின் நலனிற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ்ச் சங்கம் ஆகும்.
திட்டங்கள்
இச்சங்கத்தின் வழியாக
- தமிழ் கலாச்சாரத்தை தமிழ் பேசும் மக்களிடம் கட்டிக் காத்தல், வளர்த்தல்,
- வரும் தலைமுறையினர்க்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை கற்பித்தல்,
- தமிழ் திருநாளாம் பொங்கல் தினத்தை "தமிழ்நாடு தினம்" ஆக கொண்டாடி வட இந்திய மக்களுக்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டியம், இசை பற்றி தெரியப்படுத்துதல்
- இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் நடத்துதல்
- இங்கு வாழ் தமிழர்களின் நலனிற்காக ஒரு நூலகம் அமைத்து தமிழ் மொழி வளர்த்தல்.
-ஆகிய பணிகளும், மற்றும் சமூகப் பணிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.