அலைக்கற்றை எஸ். பாண்ட்
அலைக்கற்றை எஸ். பாண்ட் (S-Band) அலைக்கற்றை என்பது 2 முதல் 4 கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவை குறிப்பதாகும். அலைபேசி தொலைதொடர்புக்கும், ராடார் இயக்கத்துக்கும், தரைவழி தொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் 2.6 கிகா கெட்சு (2500-2690 கிகா கெட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் 2000ம் ஆண்டு தரைவழி அலைப் பேசி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.[1]
இந்திய எஸ் பாண்ட் அலைக்கற்றை சர்ச்சை
2011 பெப்ரவரியில் இந்திய விண்வெளித்துறையின் வணிகக் கிளையான ஆந்த்ரிக்சு கழகம் இதன் ஒரு பகுதியான 70 மெகா கெட்சு அளவிற்கு தேவாசு மல்டிமீடியா, பெங்களூரு என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 2,00,000ம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.[2][3]தற்போது இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.