அருணாசல புராணம்

அருணாசல புராணம் என்னும் நூல் எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது.

  • இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
  • சோழநாட்டுச் சைவ வேளாளர் இல்லங்களில் பெரிதும் போற்றப்படும் நூல்கள்
அருணாசல புராணம்
பெரிய புராணம்
திருவிளையாடல் புராணம்
பிரமோத்தர காண்டம்

‘அண்ணல் மலை’யாகிய திருவண்ணாமலையை அருணன் அசலம் எனக் கொண்டு பிற்காலத்தில் வடமொழியாளர் பெயர் சூட்டினர்.
அண்ணாமலை அண்ணலாகிய சிவபெருமானின் புகழைப் போற்றுவது இந்த நூல்.
இது இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது.

முதல் பாகத்தை வடமொழிச் சிவபுராணத்திலுள்ள ‘ருத்திர சங்கிதை’யிலிருந்தும்,
இரண்டாம் பாகத்தை ‘லிங்க புராண’த்திலிருந்தும் கருத்துக்களை எடுத்துககொண்டு பாடியதாகப் புலவரே தம்பாடலில் குறிப்பிடுகிறார்.

பாயிரம் நீங்கலாக ஒவ்வொன்றிலும் ஆறு சருக்கங்கள் உள்ளன.

451 பாடல்கள்

  1. திருநகர்ச் சருக்கம்
  2. திருமலைச் சருக்கம்
  3. திரு அவதாரச் சருக்கம்
  4. திருக்கண் புதைத்த சருக்கம்
  5. பார்வதி இடப்பாகம் பெற்ற சருக்கம்
  6. வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்

137 பாடல்கள்

  1. தீர்த்தச் சருக்கம்
  2. திருமலை வலம்புரிச் சருக்கம்
  3. ஆதித்தச் சருக்கம்
  4. பிரதத்தராசன் சருக்கம்
  5. பாவம் தீர்த்த சருக்கம்
  6. புளகாதிபச் சருக்கம்
  • இதே நூற்றாண்டில் இதே அண்ணாமலையைப் பற்றி அருணகிரிப் புராணம் என்னும் நூல் மறைஞான சம்பந்தர் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது.

நூலோடு செருகல்

வீராணப் புலவர் எயுதிய வல்லாள மகாராசன் கதை என்னும் பகுதி வல்லாள மகாராசன் சருக்கம் என்னும் பெயரில் இந்த நாலில் 1800ஆம் ஆண்டு இடையிலே செருகப்பட்டுள்ளது.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.