அருட்பா மருட்பா
அருட்பா மருட்பா என்பது 18 ஆம் நூற்றாண்டிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியிலும் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த ஒரு மெய்யியல், சமயக் கருத்துப் போராட்டத்தையும், அதனோடு தொடர்புடைய ஒரு வழக்கையும் குறிக்கிறது. சாதியத்தையும், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வினையையும் கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். சைவ, சாதிய மரபுகளை வலியுறுத்தியவர் ஆறுமுக நாவலர். வள்ளலார் பாடிய பாடல்கள் அருட்பா என்று இதர சைவ படைப்புகளோடு கருதப்படத்தக்கவை அல்ல என்று ஆறுமுக நாவலரும் அவர் சார்பு சுக்கிரவார சங்கமும் கட்டனப் பரப்புரை செய்தனர். இது தொடர்பாக ஒரு வழக்கும் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டது.
இசுலாமியத் தமிழறிஞர் செய்குத்தம்பி பாவலர் வள்ளலாருக்கு ஆதரவாக சொற்பொழிவுகள் ஆற்றினார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.