அன்னா அக்மதோவா
அன்னா அக்மதோவா 1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து, 1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். 1912 இல் முதலாவது கவிதை நூலான 'மாலைப்பொழுது' வெளிவந்தது; 1914 இல் 'மணிகள்' என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 - 40 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட 'இரங்கற்பா' நெடுங்கவிதை மிக முக்கியமான படைப்பாகும். 'யுனெஸ்கோ' நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை 'அக்மதோவா ஆண்டு' எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார்.
அன்னா அக்மதோவா | |
---|---|
![]() Akhmatova in 1922 (Portrait by Kuzma Petrov-Vodkin) | |
பிறப்பு | Anna Andreevna Gorenko சூன் 23, 1889 Odessa |
இறப்பு | மார்ச்சு 5, 1966 76) சென் பீட்டர்ஸ்பேர்க் | (அகவை
நாடு | ரசியர் |
இலக்கிய வகை | கவிதை |
இயக்கம் | Acmeism |
துணைவர்(கள்) | Nikolay Gumilyov Vladimir Shilejko Nikolai Punin |
பிள்ளைகள் | Lev Gumilyov |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.