அண்டர்
அண்டர் என்போர் சங்க கால நாட்டுமக்களில் இடையர் குடியை சேர்ந்த மக்கள் ஆவர். குதிரைமீது சென்று ஆனிரைகளை மேய்த்தவர்கள்.
- அண்டர் குடிமக்கள் சிறந்த குதிரை வீரர்கள். சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறை இவர்களைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தான்.[1]
- அண்டர் எருதுகளைக் கயிற்றில் பிணைத்து ஓட்டிச் செல்வர்.[2]
- நள்ளி நாட்டுக் காடுகளில் அண்டர் குடிமக்கள் வாழ்ந்தனர். குதிரை மீது ஏறி ஆனிரை மேய்ப்பது இவர்கள் தொழில். இவர்கள் வழங்கும் நெய் மிகச் சிறந்தது.[3]
- மாஅல் யமுனைத் துறையில் அண்டர் மகளிர் ஆடைக்காக மரத்தை மிதித்துக் கிளைகளை வளைத்துத் தந்தான்.[4]
- அண்டர்மகன் குறுவழுதியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
அடிக்குறிப்பு
- கால்வல் புரவி அண்டர் ஓட்டி – பதிற்றுப்பத்து 88
- அண்டர் கயிறு அரி எருது - குறுந்தொகை 117
- குறுந்தொகை 210
-
தொழுநை வார்மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் - அகம் 59-5
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.