அகத்திணை வாயில்கள்
தலைவன்-தலைவி மாட்டு நல்லுறவு அமையத் தூது செல்வோரை அகத்திணை வாயில்கள் என்பர்.
அகவொழுக்கம் உள்ளத்தில் பதிந்து கிடக்கும் ஒழுக்கம். பிறருக்குப் புலப்படுத்த முடியாத உடலுறவு பற்றியது. இது தலைவன்-தலைவி உறவாக அமையின் போற்றப்படும், அதுவும் திருமணத்துக்கு முன் அமையின் தூற்றப்படும். தூற்றுதலை அலர் என்பர். தலைவன்-பரத்தை உறவு பழிக்கப்படும்.
இந்த வாயில்கள் யார் யார் எனத் தொல்காப்பியர் பட்டியலிட்டுக் காட்டுகிறார். (கற்பியல் 52)
- தோழி,
- தாய்,
- பார்ப்பான்,
- பாங்கன்,
- பாணன்,
- பாடினி,
- இளையர்,
- விருந்தினர்,
- கூத்தர்,
- விறலியர்,
- அறிவர்,
- கண்டோர்
என்னும் 12 பேர் வாயில்கள். இவர்களை வீட்டுக்குள் நுழைய இடம் தரும் வாயிலோடு ஒப்பிடலாம்.
காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.