பிரான்மலைக் குடைவரை கோயில்
பிரான்மலைக் குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் சிங்கம்புணரிக்கு அண்மையில் உள்ள பிரான்மலையில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 9 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இது ஒரு சிறிய குடைவரை கோயில். பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]
அமைப்பு
பிரான்மலையில் கிழக்குத்திசை நோக்கிக் குடையப்பட்டுள்ள இக்குடைவரை, பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிறிய குடைவரைகளுள் ஒன்று. ஆனாலும், கருவறையுடன், இடைகழி, அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகிய பகுதிகளும் இக்குடைவரையில் உள்ளன. தூண்கள் எதுவும் காணப்படவில்லை.[2]
சிற்பங்கள்
கருவறையில் உமாதேவியும் சிவனும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர். கருவறைக்கு வெளியே இருமருங்கும் பெண் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
- Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.173
- இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 169.