பகுதி

பகுதி என்பது தனிச்சொல் நிலையில் இருக்கும் பகுபதத்தின் பகாபத நிலை. [1] இதனை மேலும் பகுத்தால் பயனில்லாமல் போகும். [2]

  • பண்புப் பகுதிகள்
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை முதலானவையும் அவற்றின் எதிர்ச்சொற்களும் பண்பை உணர்த்தும் பகுதிகள். [3]
  • வினைப் பகுதி ஈறுகள்
நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என 23 ஈற்றெழுத்துக்களில் முடியும் பல ஏவல்வினைப் பகாப்பதங்கள். [4] செய், செய்வி, செய்விப்பி என்னும் ஏவல் வகைகளும் அவை [5]


    பகுதி எப்பொழுதும் கட்டளையாகவே (ஏவலாகவே) வரும். (எ.கா): பாடினான். இதைப் பிரித்தால் பாடு+இன்+ஆன் என வரும். இதில் "பாடு" என்பதே பகுதி. வினைச்சொற்களில் பகுதியே தொழிலை உணர்த்தும். பகுதியை முதனிலை என்றும் அழைப்பர்.

    அடிக்குறிப்பு

    1. தத்தம் பகாப் பதங்களே பகுதி யாகும். (நன்னூல் 134)
    2. நன்னூல் 131
    3. நன்னூல் 135
    4. நன்னூல் 137
    5. நன்னூல் 138
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.