தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் குடியரசு என்பது ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின்2,798 கிலோமீட்டர்கள் (1,739 mi) கடற்கரையை ஒட்டி [7][8] அமைந்துள்ள நாடாகும்.[9] வடக்கில் நமீபியா, போட்சுவானா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளும்; கிழக்கில் மொசாம்பிக் மற்றும் சுவாசிலாந்து நாடுகளும் அமைந்துள்ளன; அதேசமயம் முற்றிலும் தென்னாப்பிரிக்க நாட்டால் சூழப்பட்ட சுதந்திர நாடான லெசோத்தோ நடுவில் அமைந்துள்ளது.[10]

தென்னாப்பிரிக்காவின் குடியரசு

கொடி
குறிக்கோள்: "Unity In Diversity" "வேற்றுமையில் ஒற்றுமை"
நாட்டுப்பண்: தென்னாப்பிரிக்கா நாட்டுப்பண்
Location of தென்னாப்பிரிக்காவின்
தலைநகரம்பிரிட்டோரியா (செயலக)
புளொம்பொண்டீன் (நீதித்துறை)
கேப் டவுன் (சட்டமன்ற)
பெரிய நகர் ஜோகானஸ்பேர்க் (2006) [1]
ஆட்சி மொழி(கள்)
இனக் குழு 79.3% கறுப்பினத்தவர்
9.1% வெள்ளை இனத்தவர்
9.0% வேறு நிறம்
2.6% ஆசியர்கள்[3]
மக்கள் தென்னாப்பிரிக்கர்
அரசாங்கம் அரசியலமைப்பு மக்களாட்சி
   அரசுத்தலைவர் யாக்கோபு சூமா
   துணை அரசுத்தலைவர் கலிமா மொட்லாந்தே
   மாகாணங்களின் தேசிய அவையின் அவைத்தலைவர் எம். ஜே. மஹ்லங்கு
   தேசிய சட்டமன்ற அவைத்தலைவர் மாக்ஸ் சிசுலு
   தலைமை நீதிபதி சந்திலே கோபோ
விடுதலை ஐக்கிய இராச்சியமிடமிருந்து
   ஒருமிப்பு 31 மே 1910 
   Statute of Westminster 11 டிசம்பர் 1931 
   குடியரசு 31 மே 1961 
பரப்பு
   மொத்தம் 1 கிமீ2 (25th)
471 சதுர மைல்
   நீர் (%) பெரிய அளவில் இல்லை
மக்கள் தொகை
   2013 கணக்கெடுப்பு 52 981 991[4] (25th)
   2011 கணக்கெடுப்பு 51 770 560[5]
   அடர்த்தி 42.4/km2 (169th)
109.8/sq mi
மொ.உ.உ (கொஆச) 2014 கணக்கெடுப்பு
   மொத்தம் $623.201 பில்லியன்[6] (25-வது)
   தலைவிகிதம் $11,914[6] (82-வது)
மொ.உ.உ (பெயரளவு) 2008 கணக்கெடுப்பு
   மொத்தம் $371.211 பில்லியன்[6] (33-வது)
   தலைவிகிதம் $7,096[6] (83-வது)
ஜினி (2009)63.1
அதியுயர்
மமேசு (2013)0.629
Error: Invalid HDI value · 121st
நாணயம் தென்னாப்ரிக்க ராண்டு (ZAR)
நேர வலயம் SAST (ஒ.அ.நே+2)
வாகனம் செலுத்தல் left
அழைப்புக்குறி 27
இணையக் குறி .za

தற்கால மனிதர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு குடியேறி 1,00,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஐரோப்பியர்களுடன் தொடர்பிலிருந்த காலத்தில் பெரும்பான்மையினரான பூர்வகுடி மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த பழங்குடியினராக இருந்தனர். கிறித்து சகாப்தத்தின் 4ஆம்-5ஆம் நூற்றாண்டிலிருந்து பான்டு மொழி பேசும் மக்கள் தெற்கு ஆப்பிரிக்காவின் அசலான மக்களை பதிலீடு செய்தும், போரிட்டும் அவர்களுடன் ஒன்றுகலந்தும் தெற்குப் பகுதிக்கு சீரான அளவில் குடிபெயர்ந்தனர். ஐரோப்பிய தொடர்பிருந்த காலகட்டத்தில் இந்த இரண்டு குழுக்களும் சோசா மற்றும் சூலு மக்களாக இருந்தனர்.

1652 ஆம் ஆண்டில் கேப் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பின்னாளில் கேப் டவுன் என்று மாறிய புதுப்பி நிலையத்தை அமைத்தது.[11] கேப் டவுன் 1806 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனி நாடானது. ஐரோப்பிய குடியேற்றங்கள் போயர்களாக (மூலம் டச்சு, ஃபிளமிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு குடியேறிகள்) 1820 ஆம் ஆண்டுகளில் குடியேற்றங்களை விரிவாக்கிக்கொண்டன என்பதோடு 1820 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேறிகள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை கைப்பற்றினர். இந்தப் பிரதேசத்திற்கு போட்டியிட்ட சோசா, சூலு மற்றும் ஆப்ரிகானர் குழுக்களுக்கிடையே சண்டைகள் மூண்டன.

வைரங்கள் மற்றும் பின்னாளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் ஆங்கிலோ-போயர் போர் எனப்படும் 19 ஆம் நூற்றாண்டு போரைத் தூண்டியது, போயர்களும், பிரித்தானியர்களும், தென்னாப்பிரிக்காவின் கனிம வளத்தைக் கட்டுப்படுத்த சண்டையிட்டுக்கொண்டனர். பிரித்தானியர்கள் போயர்களை தோற்கடித்தனர் என்றாலும், அவர்கள் பிரித்தானிய ஆட்சிப்பகுதியாக 1910 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு நிபந்தனைக்குட்பட்ட விடுதலையை வழங்கினர். நாட்டிற்குள்ளாக விடுதலை குறித்து வெள்ளை தென்னாப்பிரிக்கர்களுக்கிடையே பிரித்தானிய எதிர்ப்பு கொள்கைகள் உருவாயின. டச்சு மற்றும் பிரித்தானிய காலனிய காலகட்டங்களில், பூர்வகுடி இடவமைப்புச் சட்டம் 1879 மற்றும் கடந்துசெல்லும் சட்டங்கள் அமைப்பு ஆகியவை பூர்வகுடி மக்களின் குடியேற்றம் மற்றும் புலம்பெயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தோடு இணைத்துக்கொள்ளப்பட்டன என்றாலும் இனவாத பிரிவினை அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடந்துவந்தது.[12][13][14] அதிகாரங்கள் யாவும் ஐரோப்பிய காலனியவாதிகளிடம் இருந்தன.

பிரிட்டோரியா உடன்படிக்கைக்கு (அத்தியாயம் XXVI )[15] வெகு முன்பிலிருந்தே போயர் குடியரசுகளிலும்,[16] அதற்கடுத்து வந்த தென்னாப்பிரிக்க அரசாங்களிலும் இது பின்னாளில் அபர்தைட் என்று அழைக்கப்பட்ட சட்டப்படி நிறுவப்பட்ட நிறவெறிக்கொள்கை ஆகி மூன்று அடுக்கு பிரிவுகளை நிறுவியது. அவை வெள்ளையினம், நிறத்தவர்கள் மற்றும் கருப்பினம். இவை ஒவ்வொன்றிற்கும் உரிமைகளும் வரம்புகளும் வரையறுக்கப்பட்டன.

தென்னாப்பிரிக்கா 1961 ஆம் ஆண்டில் குடியரசு தகுதியைப் பெற்றது. நாட்டின் உள்ளேயும் வெளியிலும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், நிறவெறியைத் தொடர்வதற்கான சட்ட வரையறையை அரசாங்கம் இணைத்துக்கொண்டது. 20 ஆம் நூற்றாண்டில் சில மேற்கத்திய நாடுகளும் நிறுவனங்களும் இந்த நாட்டின் நிறவெறிக் கொள்கைகள் மற்றும் குடியுரிமை நசுக்கப்படுவதன் காரணமாக இதனோடு எந்த தொடர்பையும் மேற்கொள்வதை புறக்கணித்தன. கறுப்பு தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளால் பல ஆண்டு உள்நாட்டுப் போராட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் 1990 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அரசு தொடங்கிய பேச்சுவார்த்தைகள் இந்த பாரபட்சமான சட்டங்கள் நீக்கப்படுவதற்கும், ஜனநாயகப்பூர்வமான முறையில் 1994 ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடப்பதற்கும் வழியமைத்தது. இதன் பின்னர் தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் அவையில் மீண்டும் இணைந்தது.

தென்னாப்பிரிக்கா அதனுடைய பரந்தகன்ற பண்பாடுகள், மொழிகள் மற்றும் சமய நம்பிக்கைகளுக்காக பிரபலமானதாக இருக்கிறது. அரசியலமைப்பில் பதினோரு மொழிகள் அதிகாரப்பூர்வமானதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.[9] அதிகாரப்பூர்வமான மற்றும் வணிகப் பொது வாழ்க்கையில் ஆங்கிலம் பொதுவான பேச்சுமொழியாக இருக்கிறது; இருப்பினும், இது வீட்டில் பேசப்படும் மொழிகள் வரிசையில் ஐந்தாவது பொதுமொழியாகும்.[9] தென்னாப்பிரிக்கா, பாரிய அளவில் ஐரோப்பிய, இந்திய மற்றும் ஆப்பிக்க இனக் கலப்புள்ள சமூகமாக திகழ்கிறது. இருப்பினும் தென்னாப்பிரிக்க மக்கள்தொகையில் 79.5 சதவிகிதம் கறுப்பினத்தவர் [3] என்பதோடு இவர்கள் வெவ்வேறு விதமான பான்டு மொழிகளைப் பேசும் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாவர், இவற்றில் ஒன்பது மொழிகள் அதிகாரப்பூர்வ அலுவல் மொழித்தகுதியைப் பெற்றிருக்கின்றன.[9] மக்கள்தொகையில் கால்பகுதியினர் வேலைவாய்ப்பில்லாதவர்கள்[17] , அவர்கள் ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர்கள் வருமானத்தில் வாழ்கின்றனர்.[18]

ஆப்பிரிக்க யூனியனின் நிறுவன உறுப்பு நாடுகளுள் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. இது எல்லா உறுப்பு நாடுகளுக்கிடையே மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. இது ஐக்கிய நாடுகள் மற்றும் என்இபிஏடி ஆகியவற்றின் நிறுவன உறுப்பினருமாகும். தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள், அண்டார்டிக் உடன்படிக்கை அமைப்பு, 77 நாடுகள் குழு, தெற்கு அட்லாண்டிக் அமைதி மற்றும் கூட்டுறவு மண்டலம், தெற்கு ஆப்பிரிக்க சுங்க ஒருங்கிணைப்பு, உலக வணிக அமைப்பு, அனைத்துலக நாணய நிதியம், ஜி-20 மற்றும் ஜி8+5 ஆகியவற்றிலும் உறுப்பினராக இருக்கிறது.

வரலாறு

ஜேன் வான் ரீபீக்கின் வருகை, தென்னாப்பிரிக்காவில் குடியேறிய முதல் ஐரோப்பியர், பின்னணியில் டெவில்ஸ் பீக்

தென்னாப்பிரிக்கா இந்த உலகின் பழமையான தொல்பொருள் ஆய்வுத் தளங்கள் சிலவற்றைக் கொண்டிருக்கிறது.[19][20][21] ஸ்டெர்க்ஃபாண்டின், குரோம்திராய் மற்றும் மகபன்ஸ்கட் குகைகளில் உள்ள பரந்த அளவிற்கான புதைபடிவங்கள் பல்வேறு மனித இனங்கள் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.[22] இவை ஹோமோ ஹேபில்லிஸ் , ஹோமோ எரக்டஸ் மற்றும் நவீன மனிதர்களான, ஹோமோ சேபியன்கள்.

இரும்பு பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களாக இருந்த பான்டு-பேசும் மக்கள் குடியேற்றங்கள், கி. பி நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் லிம்ப்போப்போ ஆற்றின் தெற்குப் பகுதியில் முன்பே இருந்திருக்கின்றன. அவர்கள் இடம்மாற்றப்பட்டும், போரிடப்பட்டும் மூல-கொய்சான் பேசுபவர்களை உள்வாங்கிக் கொண்டவர்களாகவும் இருந்தனர். பான்டு மக்கள் மெதுவாக தெற்கு நோக்கி நகர்ந்தனர். அண்மை கால குவாசூலு-நடால் பிரதேசத்து மிகப்பழமையான இரும்பு வேலைப்பாடுகள் 1050 ஆம் ஆண்டிலிருந்து இருந்துவருவதாக நம்பப்படுகிறது. தெற்கு பகுதியில் இருக்கும் குழு சோசா மக்கள் ஆவர், இவர்களுடைய மொழி பழங்கால கொய்சான் மக்களிடமிருந்து குறிப்பிட்ட மொழிசார் பண்பியல்புகளைப் பெற்றுக்கொண்டதாக இருக்கிறது. இந்த சோசா இன்று கிழக்கு கேப் பிரதேசத்தில் இருக்கும் கிரேட் ஃபிஷ் ஆற்றை எட்டினர். அவர்கள் புலம்பெயர்கையில், இந்த பெரிய இரும்பு யுக மக்கள்தொகையினர் இடமாற்றப்பட்டனர் அல்லது வேட்டைக்குழு சமூகங்களாக இருந்த பழங்கால மக்களினத்தோடு இணைந்துகொண்டனர்.

Historical states
in present-day
South Africa
more

1487 ஆம் ஆண்டில், போர்ச்சுக்கீசிய கண்டுபிடிப்பாளரான பார்டலோமு டயஸ் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த முதல் ஐரோப்பியரானார். தொடக்கத்தில் கேப் ஆஃப் ஸ்டார்ம்ஸ் என்று பெயரிடப்பட்டிருந்த இது இந்தியாவின் செல்வ வளத்திற்கு இட்டுச்செல்கிறது என்பதால் போர்ச்சுக்கீசிய அரசர் இரண்டாம் ஜான் என்பவரால் இதற்கு கேபோ டா போவா எஸ்பரென்கோ அல்லது நன்னம்பிக்கை முனை என்று மறுபெயரிட்டார். டயஸின் மாபெரும் நீண்ட கடல்பயணம் பின்னாளில் கேமியோவின் காவிய போர்ச்சுக்கீசிய கவிதையான தி லூஸியட்ஸில் (1572) அமரத்துவம் பெற்றது. 1652 ஆம் ஆண்டில் ஜேன் வான் ரீபீக் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக நன்னம்பிக்கை முனையில் புதுப்பி மையம் ஒன்றை நிறுவினார். டச்சுக்காரர்கள் இந்தோனேசியா, மடகாஸ்கர் மற்றும் இந்தியாவிலிருந்து கேப் டவுனில் உள்ள காலனியவாதிகளுக்கான தொழிலாளர்களாக அடிமைகளை கொண்டுவந்தனர். அவர்கள் கிழக்கில் விரிவடைகையில், டச்சு குடியேறிகள் தென்மேற்காக பரவிய சோசா மக்களை ஃபிஷ் ஆற்றின் பிரதேசத்தில் எதிர்கொண்டனர். கேப் முன்னணி போர் என்று அழைக்கப்பட்ட தொடர்ச்சியான போர்கள் முக்கியமாக நிலம் மற்றும் கால்நடைகளின் மீது கொண்ட பற்றின் காரணமாகவே உருவாயின.

பிரித்தானியப் பேரரசு 1795 ஆம் ஆண்டில் நன்னம்பிக்கை முனைப் பகுதியைக் கைப்பற்றியது, முக்கியமாக புரட்சிகர பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் விழுவதைத் தடுப்பதற்காக. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலான அதனுடைய நிலைகளைப் பாதுகாத்துக்கொள்ள பிரித்தானியப் பேரரசு தனது வணிகர்களின் நீண்ட கடல்பயணத்திற்கான இடைப்பட்ட துறைமுகமாக கேப் டவுனை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது. 1803 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களுக்கு கேப் டவுனை பிரித்தானியப் பேரரசு திரும்ப வழங்கியது, ஆனால் வெகுவிரைவிலேயே டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி திவாலானது.

1806 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு, கேப் காலனியை இணைத்துக்கொண்டது. பிரிட்டன், சோசாவிற்கு எதிரான முன்னணிப் போர்களை தொடர்ந்து நடத்தியது, ஃபிஷ் ஆற்றைச் சுற்றிலும் நிறுவப்பட்டிருந்த கோட்டை வரிசைகளின் வழியாக கிழக்கத்திய முன்னணியை கிழக்கு நோக்கி தள்ளியது. அவர்கள் பிரித்தானியக் குடியேற்றங்களை ஊக்குவித்ததன் மூலம் இந்தப் பிரதேசத்தை ஒன்றிணைத்துக்கொண்டனர். பிரிட்டனில் அப்போது இருந்த கொத்தடிமை அழிப்பு இயக்கங்களின் நெருக்கடி காரணமாக பிரித்தானியப் பாராளுமன்றம் முதலில் கொத்தடிமை வணிக சட்டம், 1807-யின் அடிப்படையில் அதனுடைய உலகளாவிய கொத்தடிமை வணிகத்தை நிறுத்தியது, பின்னர் கொத்தடிமைத்தன ஒழிப்புச் சட்டம், 1833-யின் மூலம் தன்னுடைய காலனி நாடுகள் அனைத்திலும் கொத்தடிமைத்தனத்தை ஒழித்தது.

போரில் போயர்கள் (1881)

19 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளில் சூலு மக்கள் அதிகாரத்திற்கு வந்தனர் என்பதோடு அவர்களுடைய தலைவர் சாகாவின் கீழ் தங்களுடைய பிரதேசத்தையும் விரிவுபடுத்தினர்.[23] சாகாவின் சூறையாடல் 1820 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு பீடபூமியை அழிக்கச்செய்த மெஃபகேனுக்கு ("நசுக்குதலுக்கு") மறைமுகமாக வழிவகுத்தது.[24] சூலுவின் கிளையான மில்பாலே அவர்களுடைய தலைவர் மிலிலெகாஸியின் கீழ் ஹெவெல்டின் பெரும் பகுதி உட்பட மிகப்பெரிய பேரரசாக உருவானது.

1830 ஆம் ஆண்டுகளில் ஏறத்தாழ 12000 போயர்கள் (பின்னாளில் வூர்டிரெக்கர்ஸ் என்று அறியப்பட்டவர்கள்) கேப் காலனி பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்கு வரும் என்பதால் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் எதிர்கால நடால், மத்திய ஆப்பிரிக்கப் பகுதி மற்றும் டிரான்ஸ்வால் பிரதேசத்திற்கும் குடிபெயர்ந்தனர். போயர்கள் போயர் குடியரசுகளை நிறுவினர்: தென்னாப்பிரிக்க குடியரசு (தற்போது கௌதாங், லிம்போபு, புமலங்கா மற்றும் வட மேற்குப் பிரதேசங்களாக இருப்பவை) மற்றும் ஆரஞ்சு ஃப்ரீ ஸ்டேட் (ஃப்ரீ ஸ்டேட்).

உள்நாட்டுப் பகுதியில் 1867 ஆம் ஆண்டில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், 1884 ஆம் ஆண்டில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் பொருளாதார வளர்ச்சியையும் இடப்பெயர்வையும் ஊக்குவித்தது. இது பூர்வகுடி மக்களின் ஐரோப்பிய-தென்னாப்பிரிக்க கொத்தடிமைத்தனத்தை தீவிரப்படுத்தியது. இந்த முக்கியமான பொருளாதார மூலாதாரங்களை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் ஐரோப்பியர்களுக்கும் பூர்வகுடி மக்களுக்கும் இடையிலான மற்றும் போயர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான காரணியாகவும் அமைந்தது.[25]

முதல் போயர் போரின்போது (1880–1881) உள்ளூர் நிலைகளுக்கு நன்றாக பொருந்திப்போன கொரில்லா போர்முறை உத்திகளைப் பயன்படுத்தி போயர் குடியரசு வெற்றிகரமாக பிரித்தானிய ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது. இருப்பினும், பிரித்தானியர்கள் இரண்டாம் போயர் போரில் (1899–1902) பெரும் எண்ணிக்கையில், அதிக அனுபவத்தோடு மிகவும் பொருத்தமான உத்திகளோடு போருக்கு வந்தனர், இதில் பிரித்தானியர்கள் வெற்றிபெற்றனர்.

20 ஆம் நூற்றாண்டு

பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரம், இரண்டாம் போயர் போர் முடிந்து சரியாக எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 31 மே 1910 ஆம் ஆண்டில், கேப் மற்றும் நடால் காலனிகளிலிருந்தும், ஆரஞ்சு ஃப்ரீ ஸ்டேட் மற்றும் டிரான்ஸ்வால் குடியரசுகளிளிருந்தும் தென்னாப்பிரிக்க ஒருமிப்பு உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தென்னாப்பிரிக்க ஒருமிப்பு, பிரித்தானியப் பேரரசின் ஆட்சியதிகாரத்திற்குள் டொமினியன் அந்தஸ்த்தில் இருந்தது. 'கறுப்பர்கள்' நிலத்தை சொந்தமாக வைத்திருப்பதை, 1913 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பூர்வக்குடி நிலச் சட்டம் கடுமையாக தடைசெய்தது; அந்நிலையில் அவர்கள் நாட்டின் பரப்பில் வெறும் 7% நிலத்தை மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பூர்வக்குடி மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவு பின்னாளில் சற்றே கூடுதலாக்கப்பட்டது.[26]

1931 ஆம் ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டப்பிரிவைக் கொண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இந்த ஒருமிப்பு சுதந்திரத்தை வழங்கியது. 1934 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்க கட்சி மற்றும் தேசியக் கட்சி ஆகியவை யுனைட்டட் கட்சியை உருவாக்க ஒன்றிணைந்தன என்பதோடு ஆப்ரிகானர்ளுக்கும், ஆங்கிலம் பேசும் "வெள்ளையர்களுக்கும்" இடையிலான உடன்பாட்டை கோரியது. 1939 ஆம் ஆண்டில் இந்தக் கட்சி பிரிட்டனோடு கூட்டாக இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுவதற்கான ஒருமிப்பின் நுழைவு குறித்த சிக்கலில் உடைந்தது, போரில் ஈடுபடுவதை தேசியக் கட்சி தொண்டர்கள் வலுவாகவே எதிர்த்தனர்.

"வெள்ளையினத்தவர்கள் பயன்படுத்துவதற்கு மட்டும்" – நிறவெறிக் கொள்கைக் காலகட்ட பெயர்ப்பலகை

1948 ஆம் ஆண்டில் தேசியக் கட்சியானது அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது யூனியன் தொடங்கப்பட்டதிலிருந்து டச்சு மற்றும் பிரிட்டிஷ் காலனிகள் மற்றும் அடுத்தடுத்து வந்த தென்னாப்பிரிக்க அரசாங்கங்களின் கீழ் தொடங்கிய நிற/இன அடிப்படையில் தனிப்படுத்துகை கொள்கை அமலாக்குவதை தீவிரப்படுத்தியது. தேசியவாத அரசு இருந்துவரும் இத்தனிப்படுத்துகைச் சட்டங்களை அமைப்புமுறையாக்கியது, எல்லா மக்களையும் மூன்று வகுப்பினராகப் பிரித்தது, ஒவ்வொருவருக்கும் கடந்துசெல்லும் விதிகள் மற்றும் குடியிருப்பு தடைகள் போன்ற உரிமைகளையும் வரையறைகளையும் உருவாக்கியது. வெள்ளையின சிறுபான்மையினர் பரந்தகன்ற கறுப்பின பெரும்பான்மையினரைக் கட்டுப்படுத்தினர். இம்முறையிலான தனிப்படுத்துகை அமைப்பு ஒட்டுமொத்தமாக அபர்தைட் என்று அறியப்படலாயிற்று.

ஆப்பிரிக்கா முழுவதிலும் ஒப்பிடுகையில், மேற்கத்திய் நாடுகளின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வெள்ளையின சிறுபான்மையினர் அனுபவிக்கையில், கறுப்பின பெரும்பான்மையினர் வருமானம், கல்வி, வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைத் தேவைகள் உள்ளிட்ட ஒவ்வொரு நிலையிலும் கிட்டத்தட்ட எந்த அனுகூலமும் இல்லாதவர்களாகவே இருந்தனர். 1961 ஆம் ஆண்டு மே 31 ஆம் ஆண்டில் வெள்ளையினத்தவர்கள் மட்டும் பங்குகொண்ட பொது வாக்கெடுப்பின் படி, இந்த நாடு குடியரசானது என்பதுடன் (பிரித்தானிய) காமன்வெல்த்திலிருந்து தன்னை விடுவி்த்துக்கொண்டது. கவர்னர்-ஜெனரல் அலுவலகம் என்பது நீக்க்கப்பட்டு, நாட்டின் அதிபர் என்ற பதவிக்கு மாற்றியமைக்கப்பட்டது.

நிறவெறி அதிகப்படியான அளவிற்கு முரண்பாட்டிற்கு உள்ளானது, இது பரவலான பன்னாட்டு தடைகள், அதிகாரப்பறிப்பு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்குள்ளான பதட்டம் மற்றும் கொடுங்கோலாட்சிக்கு வழியமைத்தது. அரசாங்கத்தினால் நீண்டகாலத்திற்கு மோசமான கொடுங்கோலாட்சி நடத்தப்பட்டதுடன், வன்முறைத் தடுப்பு காலங்களில் வேலை நிறுத்தங்கள், பேரணிகள், போராட்டங்கள், குண்டுவீசியும் மற்ற பல வழிகளிலுமான நாசவேலைகள் ஆகியவை நடந்தன என்பதோடு மிகவும் குறிப்பிடத்தகுந்தது என்னவெனில் இவற்றை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பின்பற்றியதுதான்.

1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்கா அணு ஆயுத வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கியது. அதற்கடுத்த பத்தாண்டுகளில் இது ஏவக்கூடிய ஆறு அணு ஆயுதங்களை தயாரித்தது.

1990 ஆம் ஆண்டில் தேசியக் கட்சி அரசாங்கம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் அமைப்புக்களின் தடையை நீக்கியபோது பாகுபாடுகளை நீக்குவதற்கான முதல் அடியை எடுத்துவைத்தது. நாசவேலை தண்டனையாக இருபத்தி ஏழு ஆண்டுகள் சிறைவைப்பிற்குப் பின்னர் நெல்சன் மண்டேலாவை சிறையிலிருந்து விடுதலை செய்தது. ஜனநாயக தென்னாப்பிரிக்காவிற்கான உடன்படிக்கை எனப்பட்ட பேச்சுவார்த்தைத் தொடங்கியது. அரசாங்கம் நிறவெறி சட்டவரையறையை நீக்கியது. தென்னாப்பிரிக்கா தனது அணு ஆயுதக்கிடங்கை அழித்ததோடு அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. தென்னாப்பிரிக்கா தனது முதல் பல இனங்கள் பங்குகொண்ட தேர்தல்களை 1994 ஆம் ஆண்டில் நடத்தியது, இதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெற்றிபெற்றது. அதிலிருந்து இப்போதுவரை இது அதிகாரத்தில் இருந்துவருகிறது.

நிறவெறிக்குப் பிந்தைய தென்னாப்பிரிக்காவில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்தது. கறுப்பினத்தவர்கள் பலரும் மத்திய அல்லது உயர் வகுப்பினராக உயர்ந்தனர், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில்லாத கறுப்பினத்தவர்களின் விகிதம் 1994 மற்றும் 2003 ஆண்டுகளில் மோசமடைந்தது.[27] முன்பு அரிதாக இருந்த வெள்ளையினத்தவர்களுக்கு இடையிலான வறுமை அதிகரித்தது.[28] நிறவெறி அமைப்பு வளர்வதற்கு வெகுசிலர் மட்டுமே பங்களிப்பு செய்திருக்கையில், அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் தோல்வியடைவதற்கான பங்களிப்பு அதிகரித்தது. மேலும், தற்போது உள்ள அரசாங்கம், சொத்துக்கள் மறுபகிர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிற்குமான பண மற்றும் நிதி முறைமைகளை அடைய போராடிக்கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து தென்னாப்பிரிக்காவினுடைய ஐக்கிய நாடுகள் மனித வளர்ச்சிக் குறியீட்டெண் வீழ்ச்சியுற்றது, அதேசயமத்தில் 1990 ஆம் ஆண்டுகள் வரை சீராக அதிகரித்தது.[29] இவற்றில் சில எய்ட்ஸ் நோய்ப்பரவலுக்கு பங்களித்திருக்கலாம் என்பதோடு அரசாங்கம் இதைத் தெரிவிப்பதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட தோல்விக்கும் காரணமாக அமைந்தது.[30]

அரசாங்கமும் அரசியலும்

பிரிட்டோரியாவில் உள்ள ஒருமிப்பு கட்டிடங்கள் தென்னாப்பிரிக்க அரசு அலுவலர்களின் இல்லமாய்

தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று தலைநகரங்கள் இருக்கின்றன: கேப் டவுன் இவை மூன்றிலும் பெரியது என்பதுடன் அரசியலமைப்பு தலைநகரமாகவும் இருக்கிறது; பிரிட்டோரியா நிர்வாகத் தலைநகரம்; மற்றும் புளோயம்ஃபாண்டைன் நீதித்துறை தலைநகரமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்கா இரண்டு அவைகளைக் கொண்ட பாராளுமன்றமாக இருக்கிறது: பிரதேசங்களின் தேசிய கவுன்சில் (மேலவை) 90 உறுப்பினர்களைக் கொண்டது, தேசிய அசெம்பிளி (கீழவை) 400 உறுப்பினர்களைக் கொண்டது.

கீழவை உறுப்பினர்கள் சம அளவிலான பிரதிநிதித்துவத்துவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்: உறுப்பினர்களில் பாதி தேசியப் பட்டியல்களிலிருந்தும் மீதமிருப்பவர்கள் மாகாண பட்டியல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாகாணங்களின் மக்கள்தொகை பொருட்டின்றி பத்து உறுப்பினர்கள் மாகாணங்களின் தேசிய அவையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரண்டு அவைகளுக்குமான தேர்தல் ஐந்தாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அரசாங்கம் கீழவையில் உருவாக்கப்படுகிறது, தேசிய அசெம்பிளியின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் அதிபராக இருப்பார்.

கேப் டவுனில் உள்ள தேசிய சட்டவாக்க கட்டிடம்

டச்சு குடியேற்றங்கள் மற்றும் பிரித்தானியக் காலனிகளின் இறக்குமதிகளாக உள்ள டச்சு மெர்கண்டைல் சட்டம், தனிப்பட்ட சட்டம் மற்றும் ஆங்கிலப் பொதுச் சட்டம் ஆகியவை தென்னாப்பிரிக்க சட்டத்தின் பிரதான மூலாதாரங்களாக இருக்கின்றன.[31] தென்னாப்பிரிக்காவில் உள்ள முதல் ஐரோப்பியர் அடிப்படையிலான சட்டம் டச்சுக் கிழக்கிந்திய கம்பனி நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்பதுடன் இது ரோமன்-டச்சு சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பிய சட்டம், நெப்போலியன் விதியாக வரையறுக்கப்படுவதற்கு முன்பே பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதுடன் பல முறைகளிலும் ஸ்காட்ஸ் சட்டத்தோடு ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது. பிறகு, 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலச் சட்டத்தை, "பொது மற்றும் சட்டப்பூர்வ" ஆகிய வழிமுறைகளை பின்பற்றியது. 1910 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த தென்னாப்பிரிக்காவிற்கு மட்டுமேயான சொந்த பாராளுமன்றத்தைக் கொண்டிருந்தது, தனிப்பட்ட உறுப்பினர் காலனிகளுக்கென்று முன்னதாக நிறைவேற்றப்பட்டவற்றின் மீது கட்டமைக்கப்பட்டது. நிறவெறிக்கொள்கை நடைமுறையில் இருந்த ஆண்டுகளில், நாட்டின் அரசியல் காட்சி பி. ஜே. வோர்ஸ்டர் மற்றும் பி. டபிள்யு. போதா, போன்ற ஆளுமைகளாலும் ஹாரி ஸ்வார்ஷ், ஜோ ஸ்லாவோ மற்றும் ஹெலன் சுஸ்மன் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களாலும் ஆளப்பட்டிருந்தது.

டர்பன் நகர் மன்ற வளாகம்

1994 ஆம் ஆண்டில் நிறவெறிக்கொள்கை முடிவுற்றதிலிருந்து தென்னாப்பிரிக்க அரசியல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆளுமையில் இருந்தது, இது 60–70 சதவிகித வாக்குகளோடு முன்னணிக் கட்சியாக இருந்துவந்திருக்கிறது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு ஆட்சியின் முதன்மைப் போட்டியாளராக ஜனநாயக கூட்டணி கட்சி இருக்கிறது, இது 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 16.7 சதவிகித வாக்குகளும், 2006 ஆம் ஆண்டு தேர்தலில் 14.8 சதவிகித வாக்குகளும் பெற்றிருந்தது.

தனக்கு முன்பிருந்த தேசியக் கட்சியின் மூலமாக நிறவெறி கொள்கையை அறிமுகப்படுத்திய புதிய தேசியக் கட்சி 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸூடன் இணைய தீர்மானித்தது. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற மற்ற முக்கிய அரசியல் கட்சிகள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து 2006 ஆம் ஆண்டு தேர்தலில் 7.4 சதவிகித வாக்குகளை வென்ற மக்கள் காங்கிரசு மற்றும் சூலு வாக்காளர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் 2009 ஆம் ஆண்டில் 4.6 சதவிகித வாக்குகளைப் பெற்ற இன்கதா விடுதலைக் கட்சி ஆகியனவாகும்.

2004 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாடு ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற போராட்டங்கள், சில வன்முறைகள் ஆகியவற்றிற்கு இலக்கானதால், ஒரு ஆய்வாளரின் கூற்றுப்படி "உலகிலேயே போராட்டங்கள் செழித்திருக்கும் நாடு" ஆனது.[32] பெரும்பாலான போராட்டங்கள் தென்னாப்பிரிக்க நகரங்களை சூழ்ந்திருக்கும் ஏழ்மை மிகுந்த நகரங்களிலிருந்து உருவானவையாக இருந்தன.

கேப் டவுன் நகர மன்றம்

2008 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்க அரசாங்க இப்ராஹிம் குறியீட்டெண்ணில் இணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் 48 ஆம் ஆண்டில் 5வது இடத்தைப் பிடித்திருந்தது. தென்னாப்பிரிக்கா சட்டப்படியான ஆட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல், பங்கேற்பு மற்றும் மனித உரிமைகள் ஆகிய பிரிவுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றது, ஆனால் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில் மோசமான செயல்திறனைக் கொண்டிருந்தது. இப்ராஹிம் குறியீட்டெண் ஆப்பிரிக்க அரசு முழுவதையும் உள்ளடக்கிய குறியீட்டெண், இது அரசாங்கங்கள் அத்தியாவசிய அரசியல் உரிமைகளை வழங்குவதிலுள்ள வெற்றியை பிரதிபலிக்கும் வெவ்வேறு மாறுபாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்திருந்தது.[33]

1994 ஆம் ஆண்டில் நிறவெறி ஆட்சி முடிந்ததற்குப் பின்னர், "விடுதலை பெற்ற" மற்றும் "பாதி விடுதலை பெற்ற" பான்டுஸ்தான்கள், முந்தைய நான்கு மாகாணங்கள் நீக்கத்தினாலும் (கேப் மாகாணம், நடால், ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதி மற்றும் டிரான்ஸ்வல்) முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்பது புதிய மாகாணங்களாகவும் தென்னாப்பிரிக்காவின் அரசியல் கட்டமைப்பிற்குள்ளாக ஒன்றிணைந்தன. புதிய மாகாணங்கள் பொதுவாக சிறிய அளவிலானதாக இருந்தால், கோட்பாட்டுரீதியில் உள்ளாட்சிகள் பரவலாக வளங்களை பகிர்ந்தளிக்கக்கூடிய தன்மையை பெற்றுள்ளன என்பதை குறிக்கும். இந்தப் பிரதேசங்கள் 52 மாவட்டங்கள்: 6 மாநகரங்கள் மற்றும் 46 மாவட்ட நகராட்சிகளாக மேலும் பிரிக்கப்பட்டன. மாவட்ட நகராட்சிகள் மேற்கொண்டு 231 உள்ளூர் நகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. மாநகராட்சிகள் மாவட்ட மற்றும் உள்ளூர் நகராட்சிகளின் பணிகளை மேற்கொண்டன. புதிய மாகாணங்களாவன:

மாகாணம்[34] தலைநகரம்[35] பரப்பு (கிமீ²)[35] மக்கள்தொகை (2007)[36]
கிழக்கு கேப் பிஷோ 169,580 6,527,747
ஃப்ரீ ஸ்டேட் புளோயம்ஃபாண்டைன் 129,480 2,773,059
கௌதாங் ஜோகானஸ்பேர்க் 17,010 10,451,713
குவாசூலு-நடால் பீட்டர்மாரிட்ஸ்பர்க் 92,100 10,259,230
லிம்ப்போப்பு போலோக்வேன் 123,900 5,238,286
புமலங்கா நெல்ஸ்ப்ரீட் 79,490 3,643,435
வடக்கு கேப் கிம்பர்லீ 361,830 1,058,060
வட மேற்கு மாபிகெங் 116,320 3,271,948
மேற்கு கேப் கேப் டவுன் 129,370 5,278,585
மொத்தம் 1,219,080 48,502,063
தென்னாப்பிரிக்க மாகாணங்கள்

வெளியுறவு மற்றும் ராணுவம்

நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்ததிலிருந்து தென்னாப்பிரிக்காவின் வெளியுறவுக் கொள்கை அதனுடைய ஆப்பிரிக்க கூட்டாளிகளின் மீது கவனம் செலுத்துவதாகவே இருந்தது, குறிப்பாக தெற்கு ஆப்பிரிக்க மேம்பாட்டு சமூகம் (எஸ்ஏடிசி) மற்றும் ஆப்பிரிக்க ஒருங்கிணைப்பு. தென்னாப்பிரிக்கா கடந்த பத்தாண்டில் புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கொமொரோசு மற்றும் ஜிம்பாப்வே போன்றவற்றில் நடந்த ஆப்பிரிக்க பிணக்குகளில் ஒரு நடுவராக முக்கியமான பங்காற்றியுள்ளது. நிறவெறிக் கொள்கை முடிவுற்ற பிறகு தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகளில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தென்னாப்பிரிக்க ஒருங்கிணைப்புக்காக தென்னாப்பிரிக்கா ஐக்கிய நாடுகளின் உருவாக்கு உறுப்பினராக இருந்திருக்கிறது. அப்போது பிரதமராக இருந்த ஜான் ஸ்மட்ஸ் ஐக்கிய நாடுகள் வரையறைப் பட்டயத்திற்கான முன்னுரை எழுதினார்.[37][38] தென்னாப்பிரிக்கா 2007 மற்றும் 2008க்கு இடையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இருந்து வந்திருக்கிறது என்பதுடன் 2006 ஆம் ஆண்டில் பர்மிய அரசாங்கத்தை விமர்சித்து அதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்தில் எதிர்த்து வாக்களித்தது. மேலும் 2008 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு வழங்கப்படவிருந்த அமலாக்கங்களுக்கு எதிராக நடந்துகொண்டது ஆகியவற்றிற்காக முரண்பாட்டிற்கு ஆளானது. தென்னாப்பிரிக்கா ஜி-77 இன் உறுப்பினராகவும், 2006 ஆம் ஆண்டில் அதன் தலைமைப்பொறுப்பிலும் இருந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா தெற்கு அட்லாண்டிக் அமைதி மற்றும் கூட்டுறவு மண்டலம், தெற்கு ஆப்பிரிக்க சுங்க ஒருமிப்பு, உலக வணிக அமைப்பு, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் ஜி-20 மற்றும் ஜி8+5 ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கிறது.

தென்னாப்பிரிக்க டெனல் ஏஹெச்-2 ரூயாவாக் தாக்குதல் ஹெலிகாப்டர்

தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை 1994 ஆம் ஆண்டில்[39][40] முன்னாள் தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படை, ஆப்பிரிக்க தேசியவாத குழுக்களான உம்கோந்தோ வே சிஸ்வே மற்றும் அசனியன் மக்கள் விடுதலைப் படை மற்றும் முன்னாள் பான்டுஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றின் தன்னார்வ படையினராக உருவாக்கப்பட்டது.[39] தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை நான்கு கிளைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை, தென்னாப்பிரிக்க ராணுவம், தென்னாப்பிரிக்க விமானப்படை, தென்னாப்பிரிக்க கப்பற்படை, மற்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ சேவைகள் ஆகும்.[41]

அண்மைய ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை ஆப்பிரிக்காவில்[42] முதன்மையான அமைதிகாப்பு படையாக இருந்துவருகிறது என்பதுடன் லெசோத்தோ, காங்கோ மக்களாட்சிக் குடியரசு[42] மற்றும் புருண்டி[42] ஆகியவற்றில் ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. இது, பலநாடுகள் ஐநா அமைதிகாப்புப் படைகளின் ஒரு பகுதியாகவும் அங்கம் வகிக்கிறது.

தென்னாப்பிரிக்கா 1970களில்[43] அணு ஆயதத் திட்டத்தை மேற்கொண்டது, 1979 ஆம் ஆண்டில் அட்லாண்டிக் கடலில் அணு ஆயுத சோதனை நடத்தியிருக்கலாம்.[44] இது வெற்றிகரமாக அணு ஆயதங்களை உருவாக்கிய ஒரே ஆப்பிரிக்க நாடு ஆகும். இது உக்ரைனைத் தொடர்ந்து தனது அணு ஆயுதத் தயாரிப்பை தாமாக முன்வந்து கைவிட்ட மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்ட அணு ஆயுதத் திறனுள்ள இரண்டாவது நாடு ஆகும்.[43]

புவியியல்

தென்னாப்பிரிக்காவின் செயற்கைக் கோள் வரைபடம்

தென்னாப்பிரிக்கா, இரண்டு பெருங்கடல்கள் சூழ (தெற்கு அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்) ஆப்பிரிக்காவின் கடைகோடித் தெற்குப் பகுதியில் 2,500 km (1,553 mi) அமைந்திருக்கிறது. 1,219,912 km2 (471,011 sq mi),[45] பரப்பளவில் தென்னாப்பிரிக்கா உலகின் 25வது மிகப்பெரிய நாடு என்பதுடன் கொலம்பியாவின் அளவோடு ஒப்பிடக்கூடியதுமாகும். 3,408 m (11,181 ft) உயரத்தில் டார்கென்ஸ்பெர்க்கில் அமைந்திருக்கும் ஜெசுத்தி, தென்னாப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய மலையுச்சியாகும்.

மூன்று பக்கங்களிலும் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் சூழ்ந்திருப்பது, மிதவெப்ப தென் அறைகோளத்தில் அமைந்திருப்பது மற்றும் தெற்கு (ஈக்வேடாரை நோக்கி) மற்றும் மேற்கொண்டு உள்நிலப்பகுதி வடக்கு நோக்கி சீராக உயர்வதன் காரணமாகவும், தென்னாப்பிரிக்கா பொதுவாக மிதவெப்ப மண்டல பருவநிலையை கொண்டுள்ளது. இதனுடைய மாறுபடும் நில உருவினாலும் மற்றும் பெருங்கடல் தாக்கத்தினாலும், பெருமளவிற்கு வேறுபட்ட பருவ மண்டலங்கள் இருந்துவருகின்றன.

தென்னாப்பிரிக்காவின் பருவ மண்டலங்கள், மொசாம்பிக் எல்லை மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டி, வளமான மிதவெப்ப மண்டலமும், வட மேற்கில் தெற்கு நமீப் பாலைவனத்தை ஒட்டி மிக வறண்டதுமாக, பெரிய அளவில் மாறுபடுகின்றன. கிழக்கிலிருந்து சீராக ஏறுமுகமாக உள்புற மேட்டுநிலத்தை நோக்கிச் மலைத்தொடர்கள் மீதாக, "ஹைவேல்ட்" என்றழைக்கப்படும் இந்த நிலம் உயர்ந்து செல்கிறது. தென்னாப்பிரிக்கா பாதியளவிற்கு வறண்ட நிலப்பகுதியாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், பருவநிலை மற்றும் நில உருவியலில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுபாடு நிலவுகிறது.

டிராக்கன்ஸ்பெர்க் மலைத்தொடர்கள், தென்னாப்பிரிக்காவில் உள்ள மிக உயர்ந்த மலைத்தொடர்

தென்னாப்பிரிக்காவின் உட்புறப்பகுதி பரந்தும், தட்டையாகவும், நமீப் பாலைவனத்தைச் சுற்றி வடமேற்குப் பகுதியை நோக்கிச் செல்லும் உலர்ந்த கரூ என்ற மக்கள்தொகை குறைவான வறண்ட நிலப்பகுதியாகவும் இருக்கிறது. இதற்கு முரணாக, கிழக்கு கடற்கரைப்பகுதி வளமானதாகவும், நல்ல நீர்வசதியுள்ளதாகவும் காணப்படுகிறது, இது வெப்பமண்டலங்கள் போன்ற பருவநிலையை உருவாக்குகிறது.

கடைகோடி தென்மேற்குப் பகுதி, ஈரமான மழையும், வெப்பம் மற்றும் வறண்ட கோடையை பண்பை கொண்டுள்ள நடுத்தரை பருவநிலையை ஒத்திருந்து, புகழ்பெற்ற ஃபின்பாஸ் உயிரியகத்தில் காணப்படும் புல்வெளி மற்றும் புதர்க்காடுகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதி, தென்னாப்பிரிக்காவில் உற்பத்தியாகும் பெரும்பாலான ஒயின் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பகுதி குறிப்பாக ஆண்டின் எல்லா நாட்களிலும் விட்டுவிட்டு வீசும் காற்றிற்காக பிரபலமானதாக இருக்கிறது. இந்தக் காற்றின் தீவிரத்தன்மை நன்னம்பிக்கை முனையில், குறிப்பாக கப்பல் மாலுமிகளுக்கு நம்பகத்தன்மையற்றதாக இருப்பதுடன், பல கப்பல்கள் மூழ்குவதற்கு காரணமாகவும் இருக்கிறது. தெற்குக் கடற்கரையில் உள்ள மேற்கண்ட கிழக்குப் பகுதியில் பெய்யும் மழை அந்த ஆண்டு முழுவதும் மிகவும் சமமான நிலையில் பெய்து பசுமையான இயற்கைக் காட்சியை உருவாக்குகிறது. இந்தப் பகுதி "கார்டன் ரூட்" என்ற பிரபலமாக அழைக்கப்படுகிறது.

ஃப்ரீ ஸ்டேட் குறிப்பாக உயர்ந்த மேட்டுநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருப்பதன் காரணமாக தட்டையாக இருக்கிறது. வால் நதியின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஹைவேல்ட் நல்ல முறையில் நீர்வளத்தைப் பெற்றிருப்பதால் மிதவெப்பமண்டலத்தின் வெப்பநிலைகளுக்கு ஆளாவதில்லை. ஹைவேல்ட்டின் மையப்பகுதியில் இருக்கும் ஜோகானஸ்பேர்க் 1,740 m (5,709 ft) உயரத்தில் இருக்கிறது என்பதுடன் 760 mm (29.9 in) மழையளவை ஆண்டுதோறும் பெறுகிறது. இந்தப் பகுதிகளில், குளிர்காலம் மிகவும் குளிராக இருந்தாலும், பனிப்பொழிவு அரிதானது.

ஜோகானஸ்பேர்க்கின் வடக்கே இந்த உயரம் ஹைவேல்ட்டின் சரிவிற்கு அப்பால் கீழிறங்கிச் சென்று தாழ்ந்திருக்கும் புஷ்வெல்டிற்கு திரும்புகிறது, இது வறண்ட காடு மற்றும் காட்டுவாழ்க்கை கைவிடப்பட்ட கலப்பு பிரதேசமாக இருக்கிறது. ஹைவ்லேண்டின் கிழக்குச் சரிவிற்கும் அப்பால் லோவெல்ட் இந்தியப் பெருங்கடலை நோக்கி நீண்டுசெல்கிறது. இது குறிப்பாக உயர் வெப்பநிலையைக் கொண்டிருக்கிறது என்பதுடன் நீட்டிக்கப்பட்ட துணைவெப்பமண்டல வேளாண்மைக்குரிய இடமாகவும் இருக்கிறது.

ஹைவேல்ட்டின் தென்கிழக்கு சரிவுப்பகுதியை உருவாக்கும் உயர்ந்த டிராக்கன்ஸ்பெர்க் மலைத்தொடர்கள், குளிர்காலங்களில் மேலேறுவதற்கு சொற்பமான வாய்ப்புக்களையே வழங்குகின்றன. தென்னாப்பிரிக்காவில் உள்ள மிகக் குளிர்ச்சியான பகுதி மேற்கு ரோக்வேல்ட் மலைத்தொடர்களில் உள்ள சதர்லாந்து ஆகும், இங்கே குளிர்காலத்தின் உச்சக்காலத்தில், வெப்பநிலை -15 Cக்கும் மிகக்குறைவாக செல்கிறது. மிகவும் உட்புறமான பகுதிகளில் மிகுந்த வெப்பநிலை காணப்படுகிறது: 1948 ஆம் ஆண்டில் உபிங்க்டனுக்கு அருகிலுள்ள வடக்கு கேப் கலஹாரியில் 51.7 °C (125.06 °F) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.[46]

பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளின் துணை-அண்டார்டிக் தீவுக்கூட்டம் ஒன்றையும் தென்னாப்பிரிக்கா தன்னகத்தே கொண்டுள்ளது, இது மரியோன் தீவு290 km2 (110 sq mi) மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு 45 km2 (17 sq mi) (இதே பெயரில் உள்ள கனடியப் மாகானத்தொடு குழப்பிக்கொள்ளக்கூடாது) ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.

தாவர மற்றும் விலங்குகளின் வளம்

ஃபைன்போஸ், தென்னாப்பிரிக்காவிற்கே உரிய தாவர இனம், கேப் டவுனுக்கு அருகில் காணப்படுவது
அவுட்ஷூர்ன் நகரத்திற்கு அருகில் உள்ள ஸ்வார்த்பெர்க் மலைத்தொடர்கள்
மேற்கு கடற்கரை தேசியப் பூங்காவில் உள்ள மலர் வெளி

20000க்கும் மேற்பட்ட வெவ்வேறுவகை தாவர இனங்களில், இப்புவியில் அறியப்பட்ட பல்லுயிர்மத்தில் ஏறத்தாழ 10 விழுக்காட்டுடன் உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் பதினேழாவது நாடாக[47] தென்னாப்பிரிக்கா விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் மிக அதிகமாகக் காணப்படும் உயிரியகம், புல்வெளி ஆகும், குறிப்பாக ஹைவேல்ட்டில், இங்கே இந்த தாவரம் வெவ்வேறு புற்கள், புதர்ச்செடிகள், கருவேல மரங்கள், அதில் முக்கியமாக ஒட்டக-முட்செடி மற்றும் வெள்ளை முட்செடி, ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. குறைவான மழையின் காரணமாக வடமேற்கை நோக்கியப் பகுதிகளில் தாவர வளர்ச்சி அரிதாகவே காணப்படுகிறது. மிகுந்த வெப்பமும் வறட்சியுமான நமகுவாலாந்து பகுதியில் உள்ள கற்றாழைகள் மற்றும் கள்ளிச்செடிகள் போன்ற தண்ணீரை சேகரித்து வைக்கும் சதைப்பற்றுள்ள சில தாவரங்கள் இங்கே இருக்கின்றன. புல் மற்றும் புல்வெளி ஆகியன அடர்த்தியான வளர்ச்சியுடன் நாட்டின் வடகிழக்கு நோக்கி புதர்வெளிகளாக மெதுவாக மாற்றமடைகின்றன. இந்தப் பகுதியில் குரூகர் தேசியப் பூங்காவின் வடக்கு முனைக்கு அருகாமையில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான பேபாப் மரங்கள் காணப்படுகின்றன.[48]

மேற்கு கேப்பின் ஒரு சிறிய பகுதியில் அமைந்துள்ள 9000க்கும் மேற்பட்ட தாவர இனங்களைக் கொண்டிருக்கின்ற, ஆறு இனங்களுள் ஒன்றான ஃபயோன்ஸ் உயிரியகம், கேப் ஃப்ளோரிஸ்டிக் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைந்திருப்பது, தாவர இனங்களுள் பல்லுயிரி பெருக்கத்தினை வளம் மிகுந்ததாக உருவாக்கச்செய்ய உதவுகிறது. இங்கு காணப்படும் பெரும்பாலான தாவரங்கள், ஸ்கிலிரோஃபிலஸ் போன்ற ஊசி போல், என்றும் பசுமை மாறாக்கடினமான இலைகளோடு உள்ளன. தென்னாப்பிரிக்காவின் இன்னொரு தனித்துவமான தாவரம், புரோட்டியா வகையின பூக்கும் தாவரங்கள் ஆகும். தென்னாப்பிரிக்காவில் புரோட்டியாவில், 130-க்கும் மேற்பட்ட வகையினங்கள் உள்ளன.

பூக்கும் தாவரங்களின் வளம் பெருமளவு இருப்பினும், 1% தென்னாப்பிரிக்கா மட்டுமே காடாக இருக்கிறது, அதுவும் அனேகமாக, ஆற்றுப்படுகைகளில் தெற்கு ஆப்பிரிக்க அலையாத்திக் காடுகள் நிரம்பியிருக்ம், ஈரப்பதமான குவாசூலு-நடாலின் கடற்கரைச் சமவெளியில் மட்டுமே காணப்படுகின்றன. மோண்டேன் காடுகள் எனப்படும் தீப்பற்றாத சிறிய தொகுப்பு காடுகளும் இருக்கின்றன. வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்களின் தோட்டங்களில் குறிப்பாக வேறு பிறப்பிடமுள்ள தைல மரம் மற்றும் ஏங்கு மரங்கள் ஆகியவை நிறைய காணப்படுகின்றன. கடந்த நாற்பதாண்டுகளில் அதிக மக்கள்தொகை, திட்டமிடப்படாத மேம்பாட்டு முறைகள் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் காடுகள் அழிக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாக, தென்னாப்பிரிக்கா பெரிய அளவிற்கு இயற்கை வாழ்விடங்களை இழந்திருக்கிறது. அயல் தாவரங்களின் ஊடுருவல் (எ.கா. கருப்பு வேட்டில், போர்ட் ஜேக்ஸன், ஹகியா, கொங்கிணி மற்றும் ஜகரண்டா) என்று வரும்போது, உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் தென்னாப்பிரிக்கா என்றாகி, உள்நாட்டில் உள்ள பல்லுயிர்மத்திற்கும், அரிதாகிவிட்ட நீர் ஆதாரங்களையும் அச்சுறுத்துகிறது. முதல் ஐரோப்பிய குடியேறிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மூல மிதவெப்பக்காடுகள் கடுமையாக அழிக்கப்பட்டு, தற்போது சிறிய திட்டுக்களாக மட்டுமே எஞ்சியுள்ளது. ரியல் யெல்லோவுட் (போடோகார்பஸ் லேட்டிஃபோலியஸ்) , ஸ்டின்க்வுட் (அகோடியா புல்லடா) , மற்றும் தென்னாப்பிரிக்க பிளாக் அயர்ன்வுட் (ஒரியா லாரிஃபோலியா) போன்ற தென்னாப்பிரிக்க கடின மரங்கள் தற்போது அரசாங்கத்தின் அரவணைப்பில் இருக்கின்றன.

சிங்கங்கள், வேங்கைகள், வெள்ளைக் காண்டாமிருகங்கள், நீல காட்டுமான்கள், குடு மான்கள், இம்பாலாக்கள், கழுதைப் புலிகள், நீர் யானைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற பல்வேறு பாலூட்டிகள் புஷ்வெல்டில் காணப்படுகின்றன. குரூகர் தேசியப் பூங்கா மற்றும் மலா மலா ரிசர்வ் ஆகியவற்றிலும் வாட்டர்பெர்க் உயிரியகத்திலும் வடக்குப் பகுதி உள்ளிட்ட பகுதி வரையிலும் வட கிழக்காக புஷ்வெல்டின் குறிப்பிடத்தகுந்த பகுதி நீண்டிருக்கிறது.

பருவநிலை மாற்றமானது குறிப்பிடத்தக்க அளவில் அனல்காற்று, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற தீவிர வெப்பநிலை நிகழ்வுகள், தொடர்ச்சியாகவும், தீவிரத்தன்மையோடும், இப்போதே அரை-உலர் பகுதியாக இருக்கும் இந்த மண்டலங்களுக்கு, மேலும் வெப்பம் மற்றும் வறட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தேசிய பல்லுயிர்ம நிறுவனம்[49] உருவாக்கிய கணிப்பொறி தட்பவெப்பநிலை மாதிரியாக்கம், கடற்கரையைச் சுற்றி 2050 ஆம் ஆண்டிற்குள், வெப்பமானது, ஒரு டிகிரி செல்சியசிலிருந்து நான்கு டிகிரி செல்சியசு வரையில், இப்போதே சூடாக உள்ள உள்ளடங்கியப் பகுதிகளான வடக்கு கேப்பில் கோடை மற்றும் வசந்த களத்தின் இறுத நாட்களில், அதிகரிக்கும் என்று கூறுகிறது.

பருவநிலை மாற்றத்தினால், பல்லுயிர்மப்பெருக்கம் நிறைந்து காணப்படும் உலகின் ஒரு முக்கியமான இடமான கேப்பில் காணப்படும் தாவர இனங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் என்று அறியப்பட்டுள்ளது. வறட்சி, அதிகரிக்கும் காட்டுத்தீயின் வீச்சு மற்றும் நிகழ்வு, மற்றும் உயர்ந்தும் வெப்பநிலை ஆகியவை, அரிய உயிரினங்கள் பலவற்றையும் அழிவை நோக்கித் தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா தனக்கேயுரிய பல உயிரினங்களுக்கும் புகலிடமாக இருக்கிறது, இவற்றில் அழிவின் அபாயத்தில் இருக்கும் கரூவில் உள்ள ஆற்று முயலும் (புனோலாகஸ் மாண்டிகுல்லரிஸ் ) ஒன்று.

பொருளாதாரம்

டேபிள் மவுண்டைன். கேப் டவுன் நாட்டிற்கான முக்கியமான சில்லறை மற்றும் சுற்றுலா மையமாக ஆகிவிட்டதுடன், தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையான சுற்றுலா பயணிகளை கவர்கிறது

ஏராளமான மூலவளங்கள் இருப்பு, நன்கு வளர்ச்சியடைந்த நிதிநிலை, சட்டம், தகவல்தொடர்பு, ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் துறை, உலகிலேயே முதல் இருபதில் ஒன்றாக உள்ள பங்கு மாற்றகம், மற்றும் இருக்கின்ற நகர்ப்புறங்கள் முழுவதிற்குமாக நுகர்பொருட்களை திறன்மிக்க முறையில் விநியோகிப்பதற்கு நவீன உள்கட்டமைப்பு, ஆகியவற்றோடு ஐநா வகைப்படுத்தலின்படி தென்னாப்பிரிக்கா, நடு-வருமான நாடாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டுவரை மொ.உ.உ (பிபிபி) வகையில் உலகில் 25வது நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்னேறிய வளர்ச்சி நான்கு பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த விதத்தில் இருக்கிறது: கேப் டவுன், போர்ட் எலிசபெத், டர்பன் மற்றும் பிரிட்டோரியா/ஜோகானஸ்பேர்க். இந்த நான்கு பொருளாதார மையங்களுக்கும் அப்பால் முன்னேற்றம் சிறிதளவே காணப்படுவதோடு அரசு முயற்சிகள் இருப்பினும் வறுமையே நிலவுகிறது. இதன் விளைவாக பெரும்பாலான தென்னாப்பிரிக்கர்கள் ஏழ்மை நிலையிலேயே இருக்கின்றனர். இருப்பினும், முக்கியமான பகுதிகளில் சமீபத்தில் விரைவான வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளாவன, மோஸல் விரிகுடாவிலிருந்து பிளாட்டெண்பெர்க் விரிகுடா; ரஸ்டன்பெர்க் பகுதி; நெல்ஸ்புருட் பகுதி; புளோயம்ஃபோண்டெய்ன்; கேப் மேற்குக் கடற்கரை; மற்றும் குவாசூலு-நடால் வடக்குக் கடற்கரை ஆகும்.

வேலைவாய்ப்பின்மை உச்சநிலையில் இருக்கிறது என்பதுடன் வருமான சமனின்மை ஏறத்தாழ பிரேசிலுக்கு சமமாக இருக்கிறது. 1995–2003 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமான வேலைகள் குறைந்து அதிகாரப்பூர்வமற்ற வேலைகள் அதிகரித்தன; ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை நிலை மோசமடைந்தது.[27] 1995 மற்றும் 2000 ஆம் ஆண்டிற்கு இடையே குறிப்பிடத்தகுந்த அளவில் சராசரி தென்னாப்பிரிக்க வீட்டு வருமானம் குறைந்தது. இனவாத சமனின்மை என்னும் கோட்பாட்டை எடுத்துக்கொண்டால், தென்னாப்பிரிக்க புள்ளிவிவர அமைப்பு, 1995 ஆம் ஆண்டில் சாமானிய வெள்ளையின குடும்பத்தினர், சாமானிய கறுப்பின குடும்பத்தினரைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான வருமானத்தை ஈட்டினர். 2000 ஆம் ஆண்டில் சாமானிய வெள்ளையின குடும்பத்தினர், சாமானிய கறுப்பின குடும்பத்தவர்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிக வருமானம் பெற்றனர் என்று கூறுகிறது.[50] கறுப்பருக்கு பொருளாதார அதிகாரம் என்ற ஒதுக்கீட்டு கொள்கை, கறுப்பர்களின் பொருளாதார வளம் கூடியிருப்பதையும், அவர்களுள் தழைத்து வரும் இடைவகுப்பினரையும் காட்டுகிறது.[51][52] குற்றம், ஊழல் மற்றும் ஹெச்ஐவி எய்ட்ஸ் ஆகியன நாட்டில் உள்ள மற்ற பிரச்சினைகள். வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் வலுவான கட்டுப்பாட்டு முறைச் சுமையால் தென்னாப்பிரிக்கா பாதிக்கப்பட்டிருக்கிறது. பல துறைகளிலும் கால்பதிக்க அதிக தடைகளை விதிக்கும் விதமாக அரசு உரிமையுடைமை மற்றும் குறுக்கீடுகள் இருக்கின்றன..[53] தீவிர சட்டதிட்டத்திற்கு உட்படுத்தப்ட்ட தொழிலாளர் சட்டநெறிமுறைகள் வேலைவாய்ப்பின்மை சுமையை அதிகரிக்கிறது..[27]

ஜோகானஸ்பேர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா பாலம். கௌதாங் தென்னாப்பிரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவிகிதத்தையும் இந்தக் கண்டத்தின் 10 சதவிகிதத்தையும் வழங்குகிறது

அரசின் நீண்டகால போராட்டம் மற்றும் வெளிநாட்டு தடைவிதிப்புகளால், 1994 ஆம் ஆண்டு சீர்குலைந்த பொருளாதாரத்தையே நாடு பெற்றிருந்தது. அரசாங்கம் வெகுமக்களுக்கான கவர்ச்சிகரமான பொருளாதாரத் திட்டங்களை கைவிட்டன. பணவீக்கம் வீழ்ந்து, பொது நிதிகள் நிலைப்படுத்தப்பட்டு, சில வெளிநாட்டு மூலதனங்களும் கிடைத்தன.[54] இருப்பினும், வளர்ச்சியானது சராசரிக்கும் குறைவாகவே இருந்தது.[54] 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பொருளாதார வளர்ச்சியையும், வெளிநாட்டு மூலதனங்களையும், கட்டுப்பாடான தொழிலாளர் சட்டங்கள், தனியார்மயமாக்கம் மற்றும் தேவையில்லாத அரசாங்கச் செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் மேம்படுத்த அப்போதைய அதிபராக இருந்த தபோ ம்பேக்கி உறுதிபூண்டார். அவருடைய கொள்கைகள் அமைப்புரீதியான தொழிலாளர் இயக்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றன. 2004 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு பொருளாதார வளர்ச்சி இருந்து; வேலைவாய்ப்பு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய இரண்டுமே அதிகரித்தது.[54]

தென்னாப்பிரிக்கா இந்தக் கண்டத்திலேயே மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஆகும். தென்னாப்பிரிக்கா பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் திகழ்வதுடன், சுற்றுலாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கான வருவாயும் கிடைக்கிறது.[55] மாறுபட்ட மற்றும் வண்ணமயமான பண்பாடு, விலங்குகள் வாழ்விடங்கள் மற்றும் உயர்வாக மதிக்கப்படும் உள்ளூர் ஒயின்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

தென்னாப்பிரிக்க ரேண்ட் (இஸட்ஏஆர்) உலகில் மிக அதிகமாக வணிகம் செய்யப்பட்டு வரும் வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை நாணயம் ஆகும். நேர மண்டலங்களினால் ஏற்படும் பரிமாற்ற இடர்களில் தற்காத்துக் கொள்வதற்கு, அந்நியச் செலாவணிகள் உடனுக்குடன் அறுதியீடு செய்யப்படும், தொடர் இணைந்த தீர்வை (சிஎல்எஸ்) எனப்படும் பதினைந்து நாணயங்களின் மேட்டிமைச் சங்கத்தில் இணைந்துள்ளது. புளூம்பெர்க் நாணய மதிப்பீடின்படி, 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ரேண்ட், அமெரிக்க டாலர்களுக்கு (யுஎஸ்டி) எதிராக உயர்செயல்திறனுள்ள பணமாக பயன்படுத்தப்பட்டது.

ஜேஎஸ்இ ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரிய பங்கு மாற்றம்

ராண்டின் மாறுபடும் இயல்பு பொருளாதார நடவடிக்கைகளை பாதித்தது என்பதுடன், 2001 ஆம் ஆண்டில் கடுமையாக வீழ்ச்சியுற்று, ஒரு அமெரிக்க டாலர்களுக்கு 13.85 ராண்டு என்ற அளவிற்கு வந்து, பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தி, அதன் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்வதற்கு காரணமாக அமைந்தது. ராண்ட் மீண்டு வந்ததிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை ஒரு டாலருக்கு எதிராக 7.13 ராண்டு என்ற அளவில் வணிகம் செய்யப்பட்டது. இருப்பினும் வலுவான உள்நாட்டு பணத்தால் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு ஆளானதால் ராண்டின் மதிப்பை சீர்செய்ய அரசு தலையிட வேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்தனர்.

காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி மற்றும் பிற நாடுகள் உள்ளிட்ட ஏழ்மையான பக்கத்து நாடுகளிலிருந்து வந்த அகதிகள் அதிகாரப்பூர்வமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவினர். தென்னாப்பிரிக்கர்களிடையே அதிக அளவிற்கான வேலைவாய்ப்பின்மை நிலவியதாலும், தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள் பலரும் சொந்த நாட்டு மக்களின் வேலையை இந்த புலம்பெயர்ந்தவர்கள் எடுத்துக்கொள்வதாக ஓர் உணர்வு உள்ளதாலும், மேலும், தென்னாப்பிரிக்க குடிமக்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தில் மற்ற நாடுகளிலிருந்து வந்த இந்த புலம்பெயர்ந்தவர்களை தென்னாப்பிரிக்க முதலாளிகள் கட்டுமானம், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்நாட்டு சேவைத் துறைகளில் இவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் நிலை உள்ளதும், இந்த அகதிகள் மீதான இனவெறுப்பு உணர்வு தலைதூக்க வழிசெய்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக புலம்பெயர்ந்தவர்கள் முறைசாரா வணிகத்திலும் ஈடுபடுகின்றனர்.[56] இருப்பினும், தென்னாப்பிரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் பலரும் மோசமான சூழ்நிலைகளிலேயே வாழ்கின்றனர் என்பதோடு, தென்னாப்பிரிக்க குடிநுழைவுக் கொள்கை 1994 ஆம் ஆண்டிலிருந்து கடுமையாக்கப்படுவது அதிகரித்தது.[57]

மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கப்பால் முதன்மையான பன்னாட்டு வணிகக் கூட்டாளி நாடுகள் ஜெர்மனி, அமெரிக்கா, சீனம், ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகும்.[58] மக்காச்சோளம், வைரங்கள், பழங்கள், தங்கம், உலோகம் மற்றும் கனிமங்கள், சர்க்கரை, மற்றும் கம்பளி ஆகியவை முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். இயந்திரத்தொகுதி மற்றும் போக்குவரத்து சாதனங்கள் நாட்டின் இறக்குமதி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்ட இடத்தைப் பிடித்திருக்கின்றன. வேதியங்கள், உருவாக்கப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியம் ஆகியவை பிற இறக்குமதிகளாகும்.

மின்சார நெருக்கடி

ஆர்னட் மின்சார நிலையம்

மின்சாரம் தயாரிப்பதற்கான தனியார் கட்டுமானத்தை ஊக்கப்படுத்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல வெற்றியடையா முயற்சிகளுக்குப் பின்னர், 2007 ஆம் ஆண்டில் அரசுக்கு சொந்தமான எஸ்காம் என்ற மின்சார நிறுவனம் மின்சாரம் தயாரித்தல் மற்றும் ஒருங்கிணைப்பு உள்கட்டுமானமின்மைப் பிரச்சினையை எதிர்கொண்டது. இது தொழில்துறை மற்றும் நுகர்வோர்களின் தினசரி தேவைகளை நிறைவேற்றும் திறனின்றி இருந்ததுடன் நாடுதழுவிய சுழற்சிமுறை இருட்டடிப்புக்குக் காரணமானது. தொடக்கத்தில் இந்த திறனின்மைப் பிரச்சினை கோபெர்க் அணு ஆற்றல் மையத்தின் செயலிழப்பால் தூண்டப்பட்டதாக இருந்தது, ஆனால் அதிலிருந்து பொதுவான திறனின்மை என்பது அதிகரிக்கும் தேவையினால் ஏற்பட்டது என்பதே உண்மை. போதுமான அளவிற்கு மின்சார தயாரிப்பு திறனை கட்டமைத்துக்கொள்ள தவறியதற்காக இந்த நிறுவனம் பரவலாக விமர்சிக்கப்பட்டது,[59] இருப்பினும் முடிவில் உள்கட்டுமான முதலீட்டிற்கு நிதியளிப்பை அங்கீகரிக்க மறுத்ததற்கான தவறு தன்னுடையது என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது.[60]

இந்தப் பிரச்சினை சில மாதங்களிலேயே தீர்க்கப்பட்டது, ஆனால் தேசிய தேவை மற்றும் இருக்கின்ற திறன் ஆகியவற்றிற்கு இடையிலுள்ள வேறுபாடு குறைவாகவே இருந்து வருகிறது (குறிப்பாக உச்சக்கட்ட நேரங்களில்) என்பதோடு மின்சார மையங்கள் நெருக்கடி நிலையில் இருக்கின்றன, அதாவது எந்தக் காரணத்திற்காக விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டாலும் மற்றொரு சுழற்சிமுறை இருட்டடிப்புக்கு வாய்ப்பிருக்கும். அரசாங்கமும் எஸ்காமும் புதிய மின்சார தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டு வருகின்றன. இந்த மின்சார பயனீடு தனது நெய்யரியில் 2025 ஆம் ஆண்டிக்குள் 20,000 மெகாவாட் மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலமாக இருக்கும்.[61][62]

விவசாயம்

புமலங்காவின் மையப் பகுதியில் உள்ள பண்ணையில் விவசாயத்தொழிலாளர்கள் விதையிடுகின்றனர்
பண்ணைத் தொழிலாளர்கள்

தென்னாப்பிரிக்கா பெரிய விவசாயத் துறையைப் பெற்றிருக்கிறது என்பதுடன் வேளாண் பொருட்களின் மொத்த ஏற்றுமதியாளராகவும் இருக்கிறது. நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட ஆயிரம் வேளாண் கூட்டுறவுகள் மற்றும் வேளாண்தொழில்கள் இருக்கின்றன, வேளாண் ஏற்றுமதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் மொத்த ஏற்றுமதியில் 8 விழுக்காட்டை உள்ளடக்கியிருக்கின்றன. வேளாண் துறை முறைசார் வேலைவாய்ப்பில் ஏறத்தாழ 10 விழுக்காட்டிற்கு பங்களிப்பு செய்கிறது, ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளோடும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதோடும், ஒப்பிடுகையில் இது குறைவானது என்பதுடன் தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2.6 சதவிகிதம் பங்காற்றுகிறது.[63] இருப்பினும், நிலத்தின் உலர்தன்மை காரணமாக 13.5 விழுக்காட்டை மட்டுமே பயிர் வளர்ப்பிற்குப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது, இதில் 3 சதவிகிதம் மட்டுமே அதிக திறனுள்ள நிலம்.[64]

இருப்பினும் வணிகரீதியான விவசாயத் துறை நன்றாகவே வளர்ச்சியுற்றிருக்கிறது, சில நாட்டுப்புறப் பகுதியிலுள்ள மக்கள் விவசாயத்தை நம்பியே உயிர்வாழ்கின்றனர். இது உலகின் எட்டாவது மிகப்பெரிய ஒயின் தயாரிப்பாளர் என்பதுடன், சூரியகாந்தி விதைகள் உற்பத்தியில் பதினோராவது இடத்தில் இருக்கிறது. மொத்த வேளாண் தயாரிப்புகள் மற்றும் உணவுதானியங்களின் ஏற்றுமதியாளராக தென்னாப்பிரிக்கா இருக்கிறது, சர்க்கரை, திராட்சை, சிட்ரஸ், நெக்ட்ரைன், ஒயின் மற்றும் உதிரும் பழவகைகள் ஆகியவை பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களாக இருக்கின்றன. உள்நாட்டில் பெருமளவிற்கு உற்பத்தி செய்யப்படும் பயிரான மக்காச்சோளம், ஒவ்வொரு ஆண்டும் 9 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு 7.4 மில்லியன் டன்கள் நுகரப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கால்நடைகளும் தென்னாப்பிரிக்க பண்ணைகளில் பிரபலமானவையாக இருக்கின்றன, நுகரப்படும் இறைச்சியில் இந்த நாடு 85 விழுக்காட்டை உற்பத்தி செய்கிறது. பால்வளத் துறை 4,300 பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கியிருப்பதோடு 60,000 பண்ணைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது என்பதுடன் 40,000 பேர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.[65]

சமீபத்திய ஆண்டுகளில் விவசாயத் துறை சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இவற்றில் நிலச் சீர்திருத்தம் மற்றும் வேளாண் பொருட்களுக்கான சந்தையின் ஒழுங்கின்மை போன்ற சில முரண்பாட்டிற்கு ஆளாகியிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டிற்குள்ளாக வெள்ளையினத்தவர்களிடமிருந்து 30 சதவிகித உற்பத்தித் திறனுள்ள பண்ணை நிலத்தை முன்பு அனுகூலமற்றிருந்த கறுப்பினத்தவர்களுக்கு மாற்றித்தரும் இலக்கை நிர்ணயித்திருக்கிறது.[66] நிலச்சீர்திருத்தம் விவசாயக் குழுக்கள் மற்றும் நிலமில்லாத தொழிலாளர்கள் ஆகிய இருவராலுமே விமர்சிக்கப்பட்டது, பின்னவர்கள் மாற்றமடையும் நிலை வேகமானதாக இல்லை என்று குற்றம்சாட்டினர், முன்னவர்கள் இது இனவாத நடவடிக்கை என்று குற்றம்சாட்டினர், அத்துடன் ஜிம்பாப்வேயின் நிலச் சீர்திருத்த கொள்கை போன்றதாக மாற்றிவிடும்[67] என்றும் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர், இந்த அச்சம் முன்னாள் துணை அதிபரான புன்சைல் லாம்போ-சூசெக் தெரிவித்த கருத்துக்களால் தீவிரமடைந்தது..[68][69] வெளிநாட்டுப் போட்டி மற்றும் குற்றம் ஆகிய இரண்டும் இந்தத்துறைக்கு முக்கியமான இரண்டு சவால்களாக இருந்ததால் இந்தத் துறை தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொண்டது. மற்ற வகைப்பட்ட வன்முறைக் குற்றத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசாங்கம் பண்ணைத் தாக்குதல்கள் பிரச்சினையை அதிகப்படியாக கையாளுகிறது [70] அல்லது போதுமான முயற்சி எடுக்கவில்லை[71] என்பதான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது.

நிலத்தைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் உலகளாவிய பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதம் தென்னாப்பிரிக்க விவசாயத்தை பாதிக்கும் மற்றொரு பிரச்சினையாகும். தென்னாப்பிரிக்கா வழக்கத்திற்கு மாறான வகையில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என்பதுடன், இதன் விளைவாக மேல்மட்ட நீராதாரங்களும் குறைந்துவிட்டன. மேற்கு கேப்பின் சில பகுதிகளில் 2070 ஆம் ஆண்டிற்குள்ளாக மேல்மட்ட நீராதார விநியோகம் 60 சதவிகிதம் குறைந்துவிடும் என்பதை சில முன்கூறல்கள் நிரூபித்துள்ளன.[72] நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட சேதத்தை மீட்பதற்கு அரசாங்கம் நீண்டகால முன்னேற்றம் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது ஆகிய திட்டங்களுக்கு உதவியது.[73] தென்னாப்பிரிக்காவின் நிலப் பயிர்களின் நிகர மதிப்பில் 36 விழுக்காடு பெரும்பான்மை வகிக்கும் மக்காச்சோள தயாரிப்பும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்மறையான விளைவுகளை எதிர்கொண்டது. கரியமில வாயு உர விளைவுகள்[74] உடனும் அது ஆம் ஆண்டில்லாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட மதிப்பு 10 முதல் 100 மில்லியன் ராண்டுகள் வரையிலுமாக இருந்தது.[75]

மக்கள்தொகை கணக்கெடுப்பு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1900 50,14,000     
1910 58,42,000 +16.5%
1920 69,53,000 +19.0%
1930 85,80,000 +23.4%
1940 1,03,41,000 +20.5%
1950 1,33,10,000 +28.7%
1960 1,63,85,000 +23.1%
1970 2,17,94,000 +33.0%
1980 2,42,61,000 +11.3%
1990 3,79,44,000 +56.4%
2000 4,36,86,000 +15.1%
2009 (est.) 5,01,10,000 +14.7%
தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்தி வரைபடம்.[159][160]
நவீன வானவில் தேசத்தை உருவாக்கிய பல்வேறு புலம்பெயர்வுகள்

மாறுபட்ட தோற்றுவாய்கள், பண்பாடுகள், மொழிகள் மற்றும் சமயங்களோடு தென்னாப்பிரிக்கா 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இருக்கிறது. 2001 ஆம் ஆண்டில் கடைசி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அடுத்த கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டில் நடத்தப்படும். தென்னாப்பிரிக்க புள்ளியியல் அமைப்பு, மக்களை ஐந்து இனகுழுக்களாக பட்டியலிட்டு தேர்ந்தெடுத்துக்கொள்ளக் காட்டியபோது மக்கள் அந்தப்பட்டியலின் கடைசியாக இருந்த "குறிப்பிடப்படாதது/பிற" என்ற விருப்பத்தை அலட்சியப்படுத்தியதால் அதன் முடிவுகள் யாவும் நீக்கப்பட்டுவிட்டன.[76] 2009 ஆம் ஆண்டின் மையப்பகுதி மதிப்பீட்டின்படி மற்ற விருப்பங்களில் மக்கள் தெரிவு செய்தபடியாக, 79.5 சதவிகித கறுப்பு ஆப்பிரிக்கர்களும், 9.2 சதவிகித வெள்ளையினத்தவர்களும் மற்றும் 2.5 சதவிகித இந்திய அல்லது ஆசியர்கள் ஆகியோராவர்.[77]

கடந்த பத்தாண்டில்[76][78] தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகை (முக்கியமாக குடிநுழைவின் காரணமாக) அதிகரித்தது என்றாலும், 2008 ஆம் ஆண்டில் −0.501 சதவிகித (சிஐஏ மதிப்பீடு) மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருந்தது.[79] 2009 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகை 0.281 விழுக்காடு என்ற அளவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று சிஐஏ மதிப்பிட்டிருக்கிறது. 3 மில்லியன் ஜிம்பாப்வேயர்கள் உட்பட சட்டத்திற்குப் புறம்பாக குடிநுழைந்த 5 மில்லியன் மக்களுக்கு வீடாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.[80][81][82] 2008 ஆம் ஆண்டு 11 ஆம் ஆண்டில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடர்ந்து நடந்தன.[83][84]

மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் தங்களை ஆப்பிரிக்கர்கள் அல்லது கறுப்பினத்தவர்களாக அடையாளப்படுத்திக்கொன்டாலும், பண்பாட்டு அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் தென்னாப்பிரிக்கா ஒரே இனத்தைக் கொண்ட நாடல்ல. முக்கியமான இனக்குழுக்களாக சூலு, சோசா, பசோத்தா (தெற்கு சோத்தோ), பாப்பேடி (வடக்கு சோத்தோ), வெண்டா, த்சுவானா, த்சோங்கா, சுவாசி மற்றும் தேபெல்லே, ஆகியவை இருக்கின்றன, இவை அனைத்தும் பான்டு மொழிகளையே பேசுகின்றன.

சூலு, சோசா, பாப்பேடி மற்றும் வெண்டா குழுக்கள் போன்றவை தென்னாப்பிரிக்காவையே பிறப்பிடமாகக் கொண்டவை. மற்ற இனங்கள் தென்னாப்பிரிக்காவின் அண்டை நாடுகளின் எல்லைகுள்ளும் பரந்து வாழ்கின்றனர்: பசோத்தா இனம் லெசோத்தோவில் உள்ள முதன்மை இனக்குழுவாகும். த்சுவானா இனம் போட்சுவானாவின் பெரும்பான்மையான இனம் ஆகும். சுவாசி இனம் சுவாசிலாந்தில் உள்ள முதன்மை இனக்குழுவாகும். தேபெல்லே இனம் ஜிம்பாப்வேயில் உள்ள மதேபெல்லேலாந்தில் காணப்படுகிறது, இங்கே அவர்கள் மதேபெல்லே எனறு அழைக்கபடுகின்றனர். இந்த தேபெல்லே மக்கள் தங்களுடைய தற்போதைய பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்ததன் மூலம் ஷாகாவின் தண்டனையிலிருந்து தப்பிக்க மிசிலிகசி என்ற போராட்ட வீரரின் கீழ் உள்கலகம் விளைவித்த சூலு சந்ததியினர் ஆவர். தெற்கு மொசாம்பிக்கில் த்சோங்கா இனம் காணப்படுகிறது, இங்கே அவர்கள் ஷங்கான் எனப்படுகின்றனர்.

வெள்ளை இனத்தவர்கள் இனரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதோடு பின்வரும் பல இனக்குழுக்களையும் சேர்ந்தவர்களாவர்: டச்சு, ஃபிளமிஷ், போர்ச்சுகீஸ், ஜெர்மன், கிரேக்க, ஃபிரெஞ்சு ஹுகோநாட், ஆங்கிலேயர், போலிஷ், ஐரிஷ், இத்தாலியர், ஸ்காட்டிஷ் மற்றும் வெல்ஸ். இங்கே குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் (குறைந்துவிட்டனர் என்றாலும்) யூத மக்களும் இருக்கிறார்கள், அவர்களில் பெரும்பான்மையினர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லித்துவேனியாவிலிருந்து வந்தவர்கள்; இருப்பினும், பின்னாளில் பிரிட்டன், முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் இஸ்ரேலிலிருந்தும் வந்தவர்களாவர். பண்பாட்டு வழியிலும், மொழிவாரியாகவும் அவர்கள் ஆப்ரிக்கானர் மற்றும் ஆங்கிலம் பேசுபவர்களாக, இவர்களில் பலரும் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சந்ததியைச் சேர்ந்தவர்கள் (பார்க்க ஆங்கிலோ-ஆப்பிரிக்கர்), பிரிக்கப்பட்டுள்ளனர். கடந்த நூற்றாண்டில் புலம்பெயர்ந்துள்ள பல சிறிய சமூகங்களும் மற்ற மொழிகளைப் பயன்படுத்துவதையும் திரும்பப் பெற்றனர். வெள்ளையின மக்கள்தொகையினர் குறைவான பிறப்பு விகிதம் மற்றும் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்தலின் காரணமாக குறைந்து காணப்படுகின்றனர்; அவர்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர முடிவெடுத்ததன் காரணமாக பலரும் கூறுவது, அதிகப்படியான குற்ற விகிதம் மற்றும் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு கொள்கைகளும் ஆகும். 1994 ஆம் ஆண்டில் இருந்து ஏறத்தாழ 1,000,000 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் நிரந்தரமாக வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர்.[85][86][87][88]

அதிகமான புலம்பெயர்வு விகிதம் இருந்தபோதிலும், தென்னாப்பிரிக்கர்கள் அல்லாத வெள்ளையினத்தவர்கள் குறிப்பாக பிரிட்டன் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளிலிருந்து இந்த நாட்டில் குடியேறியுள்ளனர். உதாரணத்திற்கு, 2005 ஆம் ஆண்டில் 212 000 பிரித்தானிய குடிமகன்கள் தென்னாப்பிரிக்காவில் வாழ்வதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. 2003 ஆம் ஆண்டில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு வரும் பிரித்தானிய குடிபெயர்ந்தவர்களின் எண்ணி்க்கை 50 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. சற்றொப்ப 20, 000 பிரித்தானியர்கள் 2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கின்றனர். குறி்ப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வெள்ளையின ஜிம்பாப்வேயர்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது, அந்த நாடு தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களால் அவர்கள் குடிபெயர்கின்றனர். சமீபத்திய வருகைகளோடு 1980 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியைத் தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த அளவிற்கான வெள்ளையின ஜிம்பாப்வேயர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். இந்த சமூகத்தில் தாயக நாட்டம் மிகவும் உள்ள உறுப்பினர்கள் "வென்வீக்கள்" என்ற ஏடுகளில் அறியப்படுவதந காரணம், ரொடீசியாவில் அவர்கள் வாழ்ந்ததை நினைவு கூறுவதால்.[89]

கடந்த பத்தாண்டுகளில் தென்னாப்பிரிக்காவிற்கு புலம்பெயர்ந்த மற்ற பல வெள்ளையின குடியேறிகளும் இருக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டுகளில் அங்கோலா மற்றும் மொசாம்பிக் போன்ற ஆப்பிரிக்க காலனிகளின் பல போர்ச்சுக்கீசிய குடியேறிகள் அந்த நாடுகளின் சுதந்திரத்திற்குப் பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு வாழ வந்தவர்களாவர். போர்ச்சுக்கீசிய காலனிய வீரர்கள் மொசாம்பி்க்கில் உள்ள ஃப்ரலிமோ போன்ற எதிரிகளோடு சண்டையிட்டதிலிருந்து தென்னாப்பிரிக்காவின் தேசிய பாதுகாப்பு படையோடு ஆழமாக பிணைந்துவிட்டனர். இவர்களில் பலரும் நாட்டில் உணவகங்கள் மற்றும் பல்பொருள் கடைகளைத் திறந்திருக்கின்றனர். அத்துடன், 1980களிலும் 1990களிலும் குறிப்பாக போலந்து மற்றும் ஹங்கேரியிலிருந்து கிழக்கு ஐரோப்பியர் குடிபெயர்வை நிறவெறி அரசாங்கம் ஊக்கப்படுத்தியிருக்கிறது.

"நிறமானவர்கள்" என்ற சொற்பதம் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகள், அந்த காலத்தில் கேப்பில் வாழ்ந்த பழங்குடியின கொய்சான், பான்டுக்கள், வெள்ளையினத்தவர்கள் (பெரும்பாலும் டச்சு/ஆப்பிரிக்கானிர்கள் மற்றும் பிரிட்டிஷ் குடியேறிகள்) ஆகியோரின் கலப்பு வம்சாவளி மக்கள் மற்றும் ஜாவானியர், மலாய், இந்தியர், மலகாசி மற்றும் ஆசிய சந்ததியினர் (பர்மியர்கள் போன்றோர்) ஆகியோரைக் குறிக்க இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையினர் ஆப்ரிக்கான்ஸ் மொழி பேசுகின்றனர். கொய்சான் என்பது இரண்டு தனித்தனியான, உடல்ரீதியான ஒற்றுமையுள்ள இரண்டு இனங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது: மெல்-தோல் மற்றும் தோற்றத்தில் சிறியவர்கள். ஐரோப்பியர்களால் ஹொடன்டாட்சு என்று அழைக்கப்பட்ட, கோய்கோய், ஆடுமேய்க்கும் மக்கள் என்பதோடு அழிக்கப்பட்டுவிட்டனர்; ஐரோப்பியர்களால் புஷ்மென் எனப்படும் சான், வேட்டையினக் குழுக்களாவர். நிறமானவர்கள் சமூகத்திற்குள்ளாக மிகச்சமீபத்திய புலம்பெயர்ந்தோர்களும் காணப்படுகின்றனர்: முன்னாள் ரொடீசியாவிலிருந்து (இப்போது ஜிம்பாப்வே) வந்துள்ள நிறமானவர்கள்; நமீபியா மற்றும் இந்தியா மற்றும் பர்மாவிலிருந்து வந்துள்ள (ஆங்கிலோ இந்தியர்கள்/ஆங்கிலோ பர்மியர்கள்) கலப்பு வம்சாவளி புலம்பெயர்ந்தோர்கள், இந்தியா மற்றும் பர்மா விடுதலை பெற்றபோது கேப்பிற்கு வந்தவர்களாவர்.

தென்னாப்பிரிக்க ஆசிய மக்கள்தொகையினரின் பெரும்பான்மையானவர் இந்தியாவிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர் (பார்க்க இந்திய தென்னாப்பிரிக்கர்கள்); இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்போது நடால் எனப்பட்ட கிழக்கு கடற்கைப் பகுதியில் சர்க்கரை ஆலைகளில் வேலை செய்வதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் சந்ததியினர் ஆவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கும் சூலுக்களுக்கும் இடைய டர்பனில் தீவிரமான கலவரங்கள் மூண்டன.[90] சீன தென்னாப்பிரிக்கர்களும் (ஏறத்தாழ 100,000 பேர்கள்) மற்றும் வியட்நாமிய தென்னாப்பிரிக்கர்களும் (ஏறத்தாழ 50,000 பேர்கள்) இருக்கின்றனர். 2008 ஆம் ஆண்டில் 1994 ஆம் ஆண்டிற்கு முன்பு வந்த சீன தென்னாப்பிரி்க்கர்கள் நிறமானவர்கள் என்று மறுவகைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டோரியா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக 1994க்கு முன்பு வந்த, நாட்டில் உள்ள சீன மக்கள்தொகையில் 3-5 சதவிகிதம் இருக்கும் ஏறத்தாழ 12,000–15,000 [91] பழங்குடியின சீன குடிமகன்களால் அரசாங்கத்தின் பிஇஇ கொள்கைகளால் பலன்பெற முடிந்தது.[92]

தென்னாப்பிரிக்கா குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் மக்கள்தொகையையும் உள்ளடக்கியிருக்கிறது. அமெரிக்க அகதிகள் மற்றும் புலம்பெயர்வோர் ஆணையம் பதிப்பித்த 2008 ஆம் ஆண்டு உலக அகதிகள் கணக்கெடுப்பின்படி இந்த மக்கள்தொகை 2007 ஆம் ஆண்டில் 144,700 என்ற எண்ணி்க்கையில் இருந்தது.[93] அகதிகள் மக்கள் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் 100,000க்கும் மேற்பட்டோரில் ஜிம்பாப்வேயிலிருந்து வந்தவர்கள் (48,400), காங்கோ மக்களாட்சிக் குடியரசிலிருந்து வந்தவர்கள் (24,800), மற்றும் சோமாலியாவிலிருந்து வந்தவர்கள் (12,900) ஆகியோர் உள்ளடங்கியிருக்கின்றனர்.[93] இந்த மக்கள் முக்கியமாக ஜோகானஸ்பேர்க், பிரிட்டோரியா, டர்பன், கேப் டவுன் மற்றும் போர்ட் எலிசபெத் ஆகியவற்றில் வாழ்கின்றனர்.[93]

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரும் மாநகரப் பகுதிகள்

ஜோகானஸ்பேர்க்
கேப் டவுன்
டர்பன்
ஈஸ்ட் லண்டன்
பிரிட்டோரியா
தென்னாபிரிக்க நகரங்கள்
குறியீடு தரவரிசை நகரம் மக்கள்தொகை பிரதேசம் வருடாந்திர வளர்ச்சி விகிதம்
ஜிபி - கௌதாங் மெகாலோபோலிஸ் 20,000,000[94] கௌதாங் 2.47%
ஜேஹெச்பி 1 ஜோகானஸ்பேர்க் 8,837,000 கௌதாங் 2.47%
சிபிடி 2 கேப் டவுன் 3,653,000 வெஸ்டர்ன் கேப் 1.43%
இடிஹெச் 3 டர்பன் 3,192,000 குவாசுலு-நடால் 1.36%
இகேயு 4 ஜெர்மிஸ்டன் 2,724,229 கௌதாங் 1.36%
டிஎஸ்ஹெச் 5 பிரிட்டோரியா 2,450,000 கௌதாங் 1.41%
என்எம்ஏ 6 போர்ட் எலிசபெத் 1,572,000 ஈஸ்டர்ன் கேப் 0.41%
ஜேஹெச்பி 7 வெரீனிங்கிங் 1,074,000 கௌதாங் 0.41%
இசி125 8 ஈஸ்ட் லண்டன் 958,000 ஈஸ்டர்ன் கேப் 0.32%
எஃப்எஸ்172 9 ப்ளோம்ஃபோன்டெயின் 752,906 ஃப்ரீ ஸ்டேட் 0.21%
ஜிடி421 10 வேண்டர்பில்ஜ்பார்க் 650,867 கௌதாங் 0.13%

சுகாதாரம்

எய்ட்ஸ் சிவப்பு நாடா

2005 ஆம் ஆண்டில் 31 விழுக்காடு கருவுற்ற பெண்களுக்கு ஹெச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் வயது வந்தோர்களிடையே 20 விழுக்காட்டினரிடம் ஹெச்ஐவி தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆகியவற்றால் தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவல் அபாயகரமான பிரச்சினையாக இருக்கிறது.[95] உடலுறவின் மூலமாகவே பரவும் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ஆகிய இரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பு முன்பிருந்த அதிபர் தபோ ம்பெக்கி மற்றும் அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மண்டோ ஷபலாலா-சிமாங் ஆகியோரால் மறுக்கப்பட்டது, இந்த அமைச்சர் தென்னாப்பிரிக்காவில் நிகழும் பல இறப்புகள் ஊட்டச்சத்தின்மை மற்றும் வறுமையால் ஏற்படுகிறதே தவிர ஹெச்ஐவியால் அல்ல என்று வலியுறுத்தினார்.[96]

2007 ஆம் ஆண்டில் பன்னாட்டு வலியுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசு எய்ட்சுடன் போராடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.[97] 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் தபோ ம்பெக்கி ஆப்பிரிக்க தேசிய காங்கிரசால் நீக்கப்பட்டு இடைக்கால அதிபராக கலேமா மொட்லாந்தே நியமிக்கப்பட்டார். மொட்லாந்தேயின் முதல் நடவடிக்கைகளுள் ஒன்று திருமதி. ஷபலாலா-சிமாங்கிற்கு பதிலாக தற்போது அமைச்சராக இருக்கும் பார்பரா ஹோஜனை மாற்றியமைத்ததே.

உடலுறவு செயல்பாடு மிகுந்திருப்பவர்களையே எய்ட்ஸ் முக்கியமாக பாதிக்கிறது என்பதுடன் கறுப்பின மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும்பாலான இறப்புகள் குடும்பத்தில் வேலை செய்பவர்களுக்கே ஏற்படுவதால், இது பல குடும்பங்களும் தங்களுடைய பிரதான வருமானம் ஈட்டுபவர்களை இழப்பதற்கு காரணமாகிறது. இது பராமரிக்கவும் நிதி உதவிக்கும் அரசை சார்ந்திருக்க வேண்டிய பல 'எய்ட்ஸ் ஆதரவற்றோர்களையும்' உருவாக்கிவிடுகிறது.[98] தென்னாப்பிரிக்காவில் 1,200,000 ஆதரவற்றோர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.[98] வயதானவர்கள் பலரும் தங்கள் குடும்பத்தின் இளம் உறுப்பினர்களை இழந்துவிடுவதால் தங்களுக்கான உதவியையும் இழக்கிறார்கள். 5 மில்லியன் மக்கள் இந்த நோய்த் தொற்றிற்கு ஆளாகியுள்ளனர்.[97]

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

மார்க் ஷட்டில்வொர்த், விண்வெளியில் முதல் ஆப்பிரிக்கர்

தென்னாப்பிரிக்காவில் சில முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உருவாகியிருக்கின்றன. மனிதனிடமிருந்து மனிதனுக்கு முதல் இதய மாற்று அறுவைசிகிச்சை 1967 ஆம் ஆண்டில் குரூட் ஷூர் மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சையாளர் கிறிஸ்டியான் பார்னார்டால் செய்யப்பட்டது. மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு மருந்தை மாக்ஸ் தெய்லர் உருவாக்கினார், கார்மேக் எக்ஸ்ரே கணக்கிடும் வெட்டுவரைவுக்கு ஆலன் மெக்லீட் முன்னோடியாவார், பளிங்கியன்முறை எதிர்மின்னி நுண்நோக்கியியல் உத்தியை ஆரன் குலுக் உருவாக்கினார். இந்த முன்னேற்றங்கள் யாவும் நோபல் பரிசுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. மிகச்சமீபத்தில் 2002 ஆம் ஆண்டில் சிட்னி பிரென்னர் மூலக்கூறு உயிரியலில் தன்னுடைய முன்னோடி சேவைக்காக நோபல் பரிசு வென்றிருக்கிறார்.

மார்க் ஷட்டில்வொர்த் முந்தைய இணையத்தள பாதுகாப்பு நிறுவனமான த்வாட்டியை நிறுவினார், இது உலகின் முன்னணி நிறுவனமான வெரிசைனால் வாங்கப்பட்டது. உயிரித்தொழில்நுட்பம், தகவல்தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பத் துறைகளிலான தொழில்களை ஊக்கப்படுத்த அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும் தென்னாப்பிரிக்காவில் வேறு எந்த குறிப்பிடத்தகுந்த நிறுவனங்களும் நிறுவப்படவில்லை. இருப்பினும், உற்பத்தியில் கிழக்கத்திய நாடுகளோடு தென்னாப்பிரிக்காவால் போட்டியிட முடியாது என்பதும், தன்னுடைய கனிம வளங்கள் நிரந்தரமானவை என்று இந்தக் குடியரசு நம்பியிருக்க முடியாது என்ற கூற்றுக்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை உயர் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கைகொள்ளும்படி மாற்றியமைக்கச் செய்ய நினைக்கும் அரசாங்கத்தின் நோக்கம் வெளிப்படையானதாக இருக்கிறது.

விரைவாக விரிவடைந்துவரும் வானியல் சமூகத்தையும் தென்னாப்பிரிக்கா உருவாக்கி வருகிறது. இது தெற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொலைநோக்கியைப் பெற்றிருக்கிறது, இது தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரிய தொலைநோக்கி. 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சதுர கிலோமீட்டர் அணி திட்டத்திற்கான தடம்காண்பானாக கரூ அணி தொலைநோக்கியை தற்போது தென்னாப்பிரிக்கா உருவாக்கி வருகிறது. தென்னாப்பிரிக்கா சதுர கிலோமீட்டர் அணியின் இறுதிசெய்வானாகவும், ஆஸ்த்திரேலியா விருந்தினர் நாடாகவும் இருக்கும்.

சமுதாயமும் கலாச்சாரமும்

அலங்கரிக்கப்பட்ட மாளிகைகள், டிராக்கன்ஸ்பெர்க் மலைத்தொடர்கள்
பாரம்பரிய தென்னாப்பிரிக்க சமையல்

பல்லினப் பன்மைய நாடாக தென்னாப்பிரிக்கா இருப்பதால் இங்கே "ஒற்றை" பண்பாடு என்று ஒன்றில்லை என்று வாதிடலாம். இன்று பல பண்பாடுகளிலிருந்தும் வந்துள்ள உணவுப் பன்மையத்தால் எல்லோராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுடன் பெரிய அளவில் தென்னாப்பிரிக்க சமையல் வகைகளை சுவைக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளிடத்தில் இது சந்தைபடுத்தப்படுகிறது. உணவுக்கும் மேலாக இசை மற்றும் நடனம் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.

தென்னாப்பிரிக்க சமையல் சற்றே இறைச்சி சார்ந்தது என்பதுடன் பிராய் அல்லது பெர்பெகு எனப்படும் தென்னாப்பிரிக்க சமூக கூட்டுசேர்தலுக்கு வித்திட்டு இருக்கிறது. ஸ்டெலன்போஷ், ஃபிரான்ஸ்சோக், பார்ல் மற்றும் பாரிடேல் ஆகிய பள்ளத்தாக்குகளைச் சுற்றி இருக்கும் திராட்சைத் தோட்டங்களுடன், தென்னாப்பிரிக்கா முக்கியமான ஒரு ஒயின் தயாரிப்பு நாடாக வளர்ந்திருக்கிறது.[99]

தென்னாப்பிரிக்காவில் இசையிலும் பெரும் நாட்டம் காணப்படுகிறது. நிறவெறிக் காலகட்டதின்போது ஆப்ரிகான்ஸ் அல்லது ஆங்கிலப் பாடல்களைப் பாடிய பல கறுப்பின இசைக்கலைஞர்களும் தற்போது பாரம்பரிய ஆப்பிரிக்க மொழியில் பாடத்தொடங்கியிருக்கின்றனர் என்பதோடு குவைதோ எனப்படும் பிரத்யேக பாணியையும் உருவாக்கியிருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்தது ஆங்கிலத்தில் பாடப்பட்ட தன்னுடைய "வீக்கெண்ட் ஸ்பெஷல்" என்ற பாடலால் புகழ்பெற்ற பிரெண்டா ஃபாஸி ஆவார். லேடிஸ்மித் பிளாக் மம்பாஸா உள்ளிட்டோர் புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர்களாவர், அதேசமயத்தில் சுவெதோ ஸ்ட்ரிங் குவார்ட்டர் ஆப்பிரிக்க மணத்தோடு பாரம்பரிய இசையை நிகழ்த்துகிறது. வெள்ளையின மற்றும் நிறமான தென்னாப்பிரிக்க பாடகர்கள் ஐரோப்பிய இசை பாணியால் வரலாற்றுப்பூர்வமான தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா உலகப் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர்களையும் உருவாக்கியிருக்கிறது, இவர்களுள் ஹ்யு மஸக்கேலா, ஜோனாஸ் குவாங்குவா, அப்துல்லா இப்ராஹிம், மிரியம் மகேபா, ஜொனாதன் பட்லர், கிரிஸ் மெக்கிரேகர் மற்றும் சதிமா பியா பென்ஜமின் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆப்பிரிக்கானிய இசை பல்வேறு வகையினங்களையும் உள்ளடக்கியிருக்கிறது, அவை தற்காலத்திய ஸ்டீவ் ஹாஃப்மேயர் மற்றும் பன்க் ராக் இசைக்குழுவான ஃபோகோபோலிஸிகர் போன்றவை. வெரிட்டி (இசைத்துறையிலான புத்துருவாக்கத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது) போன்ற கலப்பு கலைஞர்கள் மற்றும் ஜானி கிளெக் மற்றும் அவருடைய இசைக்குழுக்கள் ஜுலுகா மற்றும் சவுகா போன்றவை பல்வேறு வெற்றிகளை நிழலுலகம், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் பெற்றிருக்கின்றன.

தென்னாப்பிரிக்காவின் கறுப்பின பெரும்பான்மையினர் பெரும்பாலும் ஊர்ப்புறத்தில் வசிக்கும் நிலையில், பெருமளவிற்கு ஏழ்மையான வாழ்நிலையிலேயே இருகிறார்கள். இந்த மக்களிடையே தான் பண்பாட்டு வழிமுறைகள் வலுவாக வாழ்கின்றன; கறுப்பினத்தவர்கள் நகர்மயமாவது மற்றும் மேற்கத்தியமயமாவது ஆகியவை பாரம்பரிய பண்பாட்டுச் சிறப்புகளை வீழ்ச்சியுறச் செய்வதாக இருக்கிறது. நகர்ப்புற கறுப்பினத்தவர்கள் தங்களுடைய சொந்த மொழிக்கும் மேலாக ஆங்கிலம் அல்லது ஆப்பிரிக்கானை பேசுகின்றனர். பதினோரு அதிகாரப்பூர்வ மொழிகளுக்குள் வராத ஆனால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, மற்ற எட்டு மொழிகளுக்குள் வரும் கொய்சான் மொழிகள் பேசும் சிறிய ஆனால் இப்போதும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் உள்ள இனங்களும் இருக்கின்றனர். அழிந்துவரும் மொழிகளைப் பேசும் சிறிய இனங்களும் இருக்கின்றன, இவற்றில் பெரும்பாலானவை அதிகாரப்பூர்வமான தகுதியைப் பெறாத கொய்-சான் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்; இருப்பினும், தென்னாப்பிரிக்காவிற்குள்ளாகவே இருக்கும் சில குழுக்கள் அவற்றின் பயன்பாடு மற்றும் புத்துயிர்ப்பிற்கு முயற்சிக்கின்றன.

நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பான்மை வெள்ளையினத்தவர் என்றாலும், தற்போது கறுப்பினத்தவர், நிறமானவர்கள் மற்றும் இந்திய இனத்தவர் என்று இவர்களும் அதிகப்படியாக இந்த வர்க்கத்தில் சேர்ந்து [100]மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் மக்களின் வாழ்கைமுறையை ஒத்து வாழ்கின்றனர். நடுத்தர வர்க்க உறுப்பினர்கள் உலகின் சந்தையோடு பெரிய அளவிற்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வெளிநாட்டிலேயே படித்துவி்ட்டு பணிபுரிகின்றனர்.

இந்திய சந்ததியைச் சேர்ந்த ஆசியர்கள், தங்களுடைய சொந்த பண்பாடு, பாரம்பரியம், மொழிகள் மற்றும் சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை கிறிஸ்துவ, இந்து அல்லது சன்னி முஸ்லிமாக இருப்பது மற்றும் இந்தி, தெலுங்கு, தமிழ் அல்லது குஜராத்தி போன்றவற்றை மிகக் குறைவாகப் பேசி இந்திய மொழிகளை தக்கவைத்திருப்பது, ஆகியவற்றின்மூலம் தக்கவைத்துக்கொண்டும், பெரும்பான்மை இந்தியர்கள் தங்களுடைய தாய்மொழியை புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்களாகவும் வாழ்கின்றனர். முதல் இந்தியர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக நடாலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக புகழ்பெற்ற ட்ருரோ கப்பலில் வந்தவர்களாவர். தென்னாப்பிரிக்காவில் மிகக் குறைவான சீன சமூகம் இருக்கிறது, இருப்பினும் இதனுடைய எண்ணிக்கை சீனக் குடியரசிலிருந்து வந்க புலம்பெயர்வாளர்களின் காரணமாக அதிகரித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்கா சாரணர் இயக்கத்திலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது, 1890 ஆம் ஆண்டில் ராணுவ அதிகாரியாக ராபர்ட் பேடன்-பவல் (சாரண நிறுவனர்) இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு பல பாரம்பரிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. தென்னாப்பிரி்க்க சாரணர் கூட்டமைப்பு தென்னாப்பிரிக்காவில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தனது கதவுகளைத் திறந்த முதல் இளைஞர் அமைப்புக்களுள் ஒன்றாகும். இது 1977 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் ஆண்டில் குவோ வாதிஸ் எனப்படும் மாநாட்டில் நடைபெற்றது.[101]

இசை

1980-களின் நடுப் பகுதியில் உருவாக்கப்பட்ட "குவைதோ" தென்னாப்பிரிக்காவின் புதிய இசை வடிவமாகத் திகழ்ந்து, இது உருவாக்கப்பட்டதிலிருந்து இந்த மக்களிடையே இது மிகவும் பிரபலமான சமூக பொருளாதார தாகங்களை வெளிப்படுத்துவதாக இருந்து வருகிறது. இருப்பினும் சிலர் குவைதோவின் அரசியல் அம்சங்கள் நிறவெறி நீக்கப்பட்டதிலிருந்து குறைக்கப்பட்டுவிட்டதாகவும், அரசியல் மீதான மக்களின் ஈடுபாடு நாளாந்த வாழ்க்கையின் குறைந்துபட்ட அம்சமாக ஆகிவிட்டது என்றும் வாதிடுகின்றனர். அரசியல் ஆழம் இல்லா நடவடிக்கைகளில் போராட்ட ஆற்றல் காட்டும் ஒரு அரசியல் சக்தி குவைதோ என்றும் சிலர் வாதிடுகின்றனர். இன்று சோனி, பிஎம்ஜி மற்றும் இஎம்ஐ போன்ற பெரிய நிறுவனங்கள் குவைதோ இசையை உருவாக்கி விநியோகிப்பதற்கான நோக்கத்தோடு தென்னாப்பிரிக்காவில் காணப்படுகின்றன. மிகுதியான இதன் பிரபலத்தின் காரணமாகவும், நாட்டில் இருக்கும் முதல் ஐந்து தாக்கமேற்படுத்தும் சமூகமாகத் திகழும் டிஜேக்களிடம் இதற்கு இருக்கும் செல்வாக்கு காரணமாகவும், குவைதோ, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இதழ்களில் இடம்பிடித்திருக்கிறது.[102]

மதம்

கிராஃப் ரெய்னட்டில் உள்ள தேவாலயம்

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கிறித்தவர்கள், மக்கள்தொகையில் 79.7 விழுக்காட்டினராக இருக்கின்றனர். இதில் சியான் கிறித்தவர்கள் 11.1 விழுக்காடு, பெந்தகோஸ்தல் (கரிஸ்மேட்டிக்) 8.2 விழுக்காடு, ரோமன் கத்தோலிக்கர் 7.1 விழுக்காடு, மெத்தோடிஸ்ட் 6.8 விழுக்காடு, டச்சு மறுசீரமைப்பு 6.7 விழுக்காடு, ஆங்கிலிக்கன் 3.8 விழுக்காடு மற்றும் பிற கிறித்தவர்கள் 36 விழுக்காடு உள்ளிட்டிருக்கிறது. மக்கள்தொகையில் இஸ்லாமிய சமயத்தினர் 1.5 விழுக்காடு இருக்கின்றனர், இந்துக்கள் 1.3 விழுக்காடு மற்றும் யூதர்கள் 0.2 விழுக்காடு இருக்கின்றனர். 15.1 விழுக்காட்டினர் சமய சார்பு எதுவுமின்றி இருக்கின்றனர், 2.3 விழுக்காட்டினர் பிறர் என்பதாகவும், 1.4 விழுக்காட்டினர் எதுவும் குறிப்பிடப்படாமலும் இருக்கின்றனர்.[58][103][104]

ஆப்பிரிக்க பழங்குடியின தேவாலயங்கள் கிறித்துவக் குழுக்களிடைய இருப்பதிலேயே மிகப்பெரியதாகும். அமைப்புரீதியாக்கப்பட்ட சமயத்தோடு சேர்ந்திராதவர்களாக இருக்கும் இவர்களில் பலரும் பாரம்பரியமான பழங்குடியின சமையத்தோடு சேர்ந்திருப்பவர்களாக கருதப்படுகின்றனர். மக்களில் பலரும் கிறித்துவம் மற்றும் பழங்குடியின தாக்கங்கள் கலந்த சமய சடங்குகளை ஒருங்கிணைத்துக்கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.[105]

காலனிய காலகட்டத்திற்கு முன்பாக, கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த சூலு, சுவாசி மற்றும் சோசா பழங்குடிகள் இஸ்லாம் சமயம் குறித்து அறிந்திருந்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தோனேஷிய தீவுக்கூட்டத்திலிருந்து (கேப் மலாய்கள்) அடிமைகளாக வந்தவர்களின் சந்ததியினரான, மேற்கு கேப்பில் உள்ள பல தென்னாப்பிரிக்க இஸ்லாமியர்கள் "நிறமானவர்கள்" என்று விவரிக்கப்படுகின்றனர். இந்தியர்களாக விவரிக்கப்படும் மற்றவர்கள், குறிப்பாக குவாசூலு-நடாலில் தெற்கு ஆசியாவிலிருந்து வணிகம் செய்வதற்காக வந்தவர்களை முன்னோர்களாகக் கொண்டவர்கள் உட்பட்; ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளிலிருந்து வரும் கறுப்பின மற்றும் வெள்ளையின தென்னாப்பிரிக்க மதமாற்றத்துக்குள்ளானவர்களும் இணைந்துவிட்டனர். இந்த நாட்டில்[106] சமயம் மாறுவதன் மூலம் வேகமாக வளர்ந்துவரும் சமயமாக இஸ்லாம் கணக்கிடப்பட்டிருக்கிறது, 1991 ஆம் ஆண்டில் 12,000 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2004 ஆம் ஆண்டில் 74,700 என்ற எண்ணிக்கைக்கு கறுப்பின இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கிறது.[107]

இந்து சமயம் முக்கியமாக பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முன்னதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டாலும், பின்னாளில் இந்தியாவிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற புலம்பெயர்வு குறிப்பிடத்தகுந்த இந்து மக்கள்தொகையினருக்கு காரணமாக இருந்திருக்கிறது. பெரும்பாலான இந்துக்கள் இனரீதியில் தெற்காசியர்கள், ஆனால் கலப்பு இனத்திலிருந்து வந்த பலரும் இஸ்கான் போன்ற இந்து மிஷனரிகளின் முயற்சிகளால் மதம் மாறியவர்களும் இருக்கிறார்கள். சிறிய எண்ணிக்கைகளில் உள்ள பிற மதங்கள் சீக்கியம், ஜைனம் மற்றும் பஹாய் நம்பிக்கை.[103]

மொழிகள்

நகராட்சி அடிப்படையில் முதன்மை தென்னாப்பிரிக்க மொழிகளை வரைபடம் காட்டுகிறது. பெரும்பான்மை அல்லாத பன்மையத்தை வெளிர் சாயல்கள் காட்டுகின்றன.[227]

தென்னாப்பிரிக்கா ஏழு அதிகாரப்பூர்வ மொழிகளைக் கொண்டிருக்கிறது:[108] ஆப்பிரிக்கானம், ஆங்கிலம், தேபெல்லே, வடக்கு சோத்தோ, சோத்தோ, சுவாசி, த்சுவானா, த்சோங்கா, வெண்டா, சோசா மற்றும் சூலு. இந்த வகையில் இது பொலியாவிற்கும் இந்தியாவிற்கும் அடுத்தபடியாக மூன்றாவதாக வரும். எல்லா மொழிகளும் சட்டப்படி ஒரேநிலையில் இருக்கையில் சில மொழிகள் மற்றவற்றைக் காட்டிலும் அதிகப்படியாக பேசப்படுகின்றன. 2001 ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தாய்மொழியாய்ப் பேசப்படும் முதல் மூன்று மொழிகள் சூலு (23.8%), சோசா (17.6%) மற்றும் ஆப்பிரிக்கானம் (13.3%) ஆகும்.[76] வணிகம் மற்றும் அறிவியலுக்கான மொழியாக ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இது 2001 ஆம் ஆண்டில் 8.2% தென்னாப்பிரிக்கர்களால் மட்டுமே பேசப்பட்டது, இது 1996 ஆம் ஆண்டைவிட (8.6 சதவிகிதம்) குறைவு.[76]

இந்த நாடு எட்டு அதிகாரப்பூர்வமற்ற மொழிகளையும் அங்கீகரித்திருக்கிறது: ஃபனகாலோ, கோயே, லோபெது, நமா, வடக்கு தேபெல்லே, ஃபுத்தி, சான் மற்றும் தென்னாப்பிரிக்க சைகை மொழி. இந்த அதிகாரப்பூர்வமற்ற மொழிகள், பன்மையமாய் இருக்கிறது என்று தீர்மானிக்கப்படுகின்ற வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் சில அதிகாரப்பூர்வ பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இருந்தபோதிலும், அவர்களின் மக்கள்தொகை காரணமாக அவை நாடு முழுவதிற்குமான அங்கீகாரத்தைக் கோருவதில்லை.

சான் மற்றும் கோய்கோய் மக்களின் "அதிகாரப்பூர்வமற்ற மொழிகள்" பலவும் நமீபியா மற்றும் போஸ்ட்வானாவை நோக்கிச் செல்லும் வடக்குப்பிரதேச பேச்சுமொழிகளை உள்ளிட்டதாக இருக்கிறது. மற்ற ஆப்பிரிக்கர்களிடமிருந்து உடல்ரீதியில் தனித்து இருக்கும் இந்த மக்கள் தங்களுடைய வேட்டைக் குழு சமீகங்களின் அடிப்படையில் தங்களுக்கேயுரிய பண்பாட்டு அடையாளத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெரிய அளவில் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர் என்பதோடு அவர்களின் மொழிகள் அழிந்துபடும் அபாயத்தில் இருக்கிறது.

பல வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களும் போர்ச்சுகீஸ் (அங்கோலன் மற்றும் மொசாம்பிக் கறுப்பினத்தவர்களாலும் பேசப்படுவது), ஜெர்மன் மற்றும் கிரேக்கம் போன்ற மற்ற ஐரோப்பிய மொழிகளையும் பேசுகின்றனர், அதேசமயம் தென்னாப்பிரிக்காவில் உள்ள சில ஆசியர்களும் இந்தியர்களும் தமிழ், ஹிந்தி, குஜராத்தி, உருது மற்றும் தெலுங்கு போன்ற தெற்காசிய மொழிகளைப் பேசுகின்றனர். பிரெஞ்சு மொழி தென்னாப்பிரிக்கர்கள் பிரெஞ்சு இனத்தவர்களாக இருக்கும் பிரான்ஷ்ஹூக் போன்ற இடங்களில் இருக்கும் பிரெஞ்சு தென்னாப்பிரி்க்கர்களால் இப்போதும் பரவலாக பேசப்படுகிறது. தென்னாப்பிரிக்க பிரெஞ்சு மொழி 10,000க்கும் குறைவான தனிநபர்களால் பேசப்படுகிறது. காங்கலிஸ் பிரெஞ்சும் புலம்பெயர்ந்தவர்களால் தென்னாப்பிரிக்காவில் பேசப்படுகிறது.

விளையாட்டுகள்

2007 ஆம் ஆண்டு ரக்பி உலகக் கோப்பையை வென்ற பின்னர் பேருந்து அணிவகுப்பில் தி ஸ்பிரிங்போக்ஸ்

கால்பந்து, ரக்பி யூனியன் மற்றும் கிரிக்கெட் போன்றவை தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கள். குறிப்பிடத்தகுந்த ஆதரவுடன் ஆடப்படும் மற்ற விளையாட்டுக்கள் நீச்சல், தடகள ஆட்டம், கால்ஃப், குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் நெட்பால் ஆகியன. இளைஞர்களிடையே மற்ற விளையாட்டுக்களைத் தொடர்ந்து கால்பந்தாட்டமே முன்னிலையில் இருக்கிறது என்றாலும் கூடைப்பந்து, சர்ஃபிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் போன்ற மற்ற விளையாட்டுக்களும் பிரபலமடைந்து வருகிறது.

ஜேகப் மெட்லாலா, உயானி புங்கு, வெல்கம் சிதா, தின்ஜான் தோப்லா, கெர்ரி கூட்ஸி மற்றும் பிரைன் மிட்செல் ஆகியோர் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர்களாவர். லூகாஸ் ரெபே மற்றும் ஃபிலிமோன் மஸிங்கா (இருவரும் முன்னாள் லீட்ஸ் யுனைட்டடிற்காக விளையாடியவர்கள்), குவிண்டோன் ஃபார்ச்சுன் (அட்லெடிகோ மேட்ரிட் மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட்), பென்னி மெக்கார்த்தி (அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம், எஃப்.சி. போர்டோ மற்றும் பிளாக்பர்ன் ரோவர்ஸ்), ஆரன் மகோனா (அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம், பிளாக்பர்ன் ரோவர்ஸ் மற்றும் போர்ட்ஸ்மவுத்), டெல்ரான் பக்லே (பொரூசியா டார்ட்மண்ட்) மற்றும் ஸ்டீவன் பியேநர் (அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம் மற்றும் எவர்டான்), முக்கியமான வெளிநாட்டு கிளப்களில் விளையாடிய கால்பந்து வீரர்கள் ஆவர். 1979 ஆம் ஆண்டு ஃபார்முலா ஒன் மோட்டார் பந்தய உலகச் சாம்பியன் ஜோடி ஷெக்டரை தென்னாப்பிரிக்கா வழங்கியிருக்கிறது. ஹெர்ஷெல் கிப்ஸ், கிரேமி ஸ்மித், ஜாக் காலிஸ், ஜேபி டுமின் இன்னபிறர் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாவர். இவர்களில் பெரும்பாலோனோர் இந்திய பிரிமியர் லீக்கில் பங்கேற்றுள்ளனர்.

கிரேமி ஸ்மித், தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் தற்போதைய அணித்தலைவர்

தென்னாப்பிரிக்கா பல்வேறு உலகத்தரம்வாய்ந்த ரக்பி வீரர்களையும் உருவாக்கியிருக்கிறது. அவர்கள், பிரான்கஸ் பயினார், ஜுஸ்ட் வான் டெர் வெஸ்தூஸன், டேனி கிரேவன், ஃப்ரிக் டு பிரீஸ், நாஸ் போதா மற்றும் பிரைன் ஹபானா. 1995 ஆம் ஆண்டு ரக்பி உலகக்கோப்பையை முதல் முயற்சியிலேயே தென்னாப்பிரிக்கா வென்றது, பிரான்சில் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. நிறவெறிக் கொள்கை முடிவுற்றது முதல் 1995 ஆம் ஆண்டிலிருந்தே தென்னாப்பிரிக்கா விளையாட அனுமதிக்கப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டு ரக்பி உலகக் கோப்பை 1996 ஆம் ஆண்டு தேசங்களின் ஆப்பிரிக்க கோப்பையை நடத்தியதன் மூலம் பெற்றது. இந்தப் போட்டியில் தேசிய அணியான 'பஃபானா பஃபானா' வென்றது. இது 2003 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையையும், 2007 ஆண்டு உலக டிவெண்டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தினர். 2010 பிஃபா உலகக் கோப்பையை சிறப்பாக நடத்தியது. இது ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியாகும்.

2004 ஆம் ஆண்டில் ரோலண்ட் ஷூமன், லிண்டன் ஃபெர்ன்ஸ், டேரியன் டவுன்சண்ட் மற்றும் ரைக் நீத்லிங் அடங்கிய நீச்சல் அணி ஏதென்சில் நடந்த 2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 4x100 ஃப்ரீஸ்டைல் தொடர் சாதனையை அடுத்தடுத்து முறியடித்தார். 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் பென்னி ஹெய்ன்ஸ் தங்கப்பதக்கம் வென்றார்.

கால்ப் ஆட்டத்தில் கேரி பிளேயர் எல்லா காலத்திற்குமான சிறந்த கால்ப் ஆட்டக்காரராக குறிப்பிடப்படுகிறார், இவர் கேரியர் கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள ஐந்து விளையாட்டு வீரர்களுள் ஒருவராவார். பாபி லாக், எர்னி எல்ஸ், ரெடிஃப் கூஸன் மற்றும் டிராவர் இம்மல்மேன் ஆகியோர் முக்கியமான போட்டிகளை வென்ற பிற தென்னாப்பிரிக்க கால்ப் ஆட்டக்காரர்களாவர்.

கல்வி

தொடக்கநிலைப் பள்ளிகள் முதல் ஏழு ஆண்டுகளுக்கு கல்வியளிப்பவையாக இருக்கின்றன. நிறவெறிக்காலகட்டத்தில் கறுப்பின மக்களுக்கான பள்ளிகளுக்கு பாகுபாடுகளாக, போதிய நிதி வழங்காமல் இருத்தல் மற்றும் "பான்டுக் கல்விமுறை" என்ற வெறும் கூளித்தொழிலார்களை மட்டும் உருவாக்கும் தனி கல்வி முறை செயல்படுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. பயிற்சிகள் ஆபிரிக்கான மொழியிலும் அளிக்கப்படுகிறது. 2002-05 ஜிடிபியில் கல்வி மீதான பொதுச் செலவினம் 5.4 விழுக்காடாக இருந்தது.[109]

சமூகப் பிரச்சினைகள்

ரோபன் தீவில் உள்ள சிறைக் கட்டிடம்

ஐக்கிய நாடுகளால் தொகுக்கப்பட்ட 1998–2000 ஆம் காலகட்டத்திற்கான கணக்கெடுப்பின்படி தென்னாப்பிரிக்கா கொலைகளில் முதலாவதாகவும், வன்முறைகள் மற்றும் கற்பழிப்புகளில் இரண்டாவதாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது.[110] அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு நாளும் தென்னாப்பிரிக்காவில் 52 பேர் கொல்லப்படுவதாக காட்டுகின்றன.[111] ஒரு வருடத்திற்கு தெரிவிக்கப்பட்ட கற்பழிப்பு எண்ணிக்கை, 55,000 என்ற அளவில் இருக்கிறது,[112] என்பதுடன் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் கற்பழிப்புகள் ஆண்டிற்கு 500,000 என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.[113] மொத்த குற்ற விகிதத்தில் தரவுத் தொகுப்பில் 60 நாடுகளில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் பிறக்கும் ஒரு பெண் படிக்கக் கற்றுக்கொள்வதைக் காட்டிலும் கற்பழிப்புக்கு ஆளாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.[114] தகவல், அதிகாரமளிப்பு மற்றும் வெளிப்படைச் சமூகத்தால் கேள்வி கேட்கப்பட்ட 4000 பெண்களில் மூன்றில் ஒருவர் கடந்த ஆண்டில் தாங்கள் கற்பழிப்புக்கு ஆளானதாக தெரிவித்திருக்கின்றனர்.[115] தென்னாப்பிரிக்காவில்தான் உலகிலேயே சிறுபிள்ளைகள் மற்றும் குழந்தைகள் கற்பழ்ப்புக்கு ஆளாகும் விழுக்காடு அதிகப்படியாக காணப்படுகிறது.[116] இது தொடர்பாக சொவீடோ நகரத்தில் 1500 பள்ளிக்குழந்தைகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நேர்காணல் செய்யப்பட்ட கால்பகுதி சிறார்கள், 'ஜேக்ரோலிங்' என்று சொல்லப்படும் குழுக்கற்பழிப்புச் செயல் ஒரு வேடிக்கையான விளையாட்டு என்று கூறினர்.[115]

நடுத்தர வர்க்க தென்னாப்பிரிக்கர்கள் குடியிருப்பு சமூகங்களில் பாதுகாப்பு கோருகின்றனர். தென்னாப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த பலரும் தாங்கள் வெளியேறுவதற்கு குற்றங்களே பெரும் உந்துதலாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றனர். விவசாய சமூகத்திற்கெதிரான குற்றச்செயல் பெரிய பிரச்சினையாக இருந்துவருகிறது.[117]

பல ஆப்பிரிக்க நாடுகளைப்போல், தென்னாப்பிரிக்காவும் கடந்த 20 ஆண்டுகளில் அறிவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுதலை எதிர்கொண்டிருக்கிறது. இது பிரதேச பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும்,[118] சுகாதார உள்கட்டமைப்பு அதிகம் தேவைப்படும் பெரும்பான்மையான மக்களின் நல்வாழ்வை நோக்கும்போதும், குறிப்பிட்டு ஹெச்ஐவி/எய்ட்ஸ் பரவலை நோக்கும்போதும், இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.[119] தென்னாப்பிரிக்காவில் திறமைகள் வெளியேறுவதில், இனவடிப்படை உள்ளதென்று நிரூபிக்கும் வகையில், (இயல்பாகவே தென்னாப்பிரிக்காவின் திறமைகள் எங்கே உள்ளது என்று நோக்கும் பொது) பெரும் அளவில் தென்னாப்பிரிக்க சமூகத்தினர் அயல்நாட்டில் குடியேறுவதற்கு காரணமாகிறது.[120]

2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தவர்களுக்கெதிராக இருந்த நீண்டகால பகைமை, 100 பேரின் சாவு மற்றும் 100,000 பேரின் இடம்பெயர்வுக்கு காரணமான அமைந்தது.[121]

மேலும் பார்க்க

  • தென்னாப்பிரிக்கா சம்பந்தப்பட்ட விஷயங்களின் பட்டியல்

பார்வைக் குறிப்புகள்

  1. Principal Agglomerations of the World at www.citypopulation.de
  2. The Khoi, Nama மற்றும் San languages; sign language; யேர்மன், கிரேக்கம், குஜராத்தி, இந்தி, போர்த்துக்கேயம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது; அரபி, எபிரேயம், சமற்கிருதம் மற்றும் சமயம் தொடர்பாகப் பயன்படும் பிற மொழிகளுக்கும் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. பார்க்க: Chapter 1, Article 6, of the Constitution.
  3. Statistics South Africa (2013) (.html). Mid-year population estimates. 2013. Stats SA. http://www.statssa.gov.za/PublicationsHTML/P03022009/html/P03022009.html. பார்த்த நாள்: 2014-01-09.
  4. "Census 2011 at a glance". Statistics South Africa. பார்த்த நாள் 2012-07-07.
  5. "South Africa". International Monetary Fund. பார்த்த நாள் 2009-10-01.
  6. "South African Maritime Safety Authority". South African Maritime Safety Authority. பார்த்த நாள் 2008-06-16.
  7. "Coastline". The World Factbook. CIA. பார்த்த நாள் 2008-06-16.
  8. "South Africa Fast Facts". SouthAfrica.info (April 2007). பார்த்த நாள் 2008-06-14.
  9. "Encyclopædia Britannica Online". Encyclopædia Britannica, Inc..
  10. "African History Timeline". West Chester University of Pennsylvania.
  11. Bond, Patrick (1999). Cities of gold, townships of coal: essays on South Africa's new urban crisis. Africa World Press. பக். 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780865436114.
  12. Cape of Good Hope (South Africa). Parliament. House. (1906). Report of the Select Committee on Location Act. Cape Times Limited. http://www.archive.org/details/reportoftheselec00capeiala. பார்த்த நாள்: 2009-07-30.
  13. Report of the Inter-departmental committee on the native pass laws. Cape Times Limited, government printers. 1920. பக். 2.
  14. De Villiers, John Abraham Jacob (1896). The Transvaal. London: Chatto & Windus. பக். 30 (n46). http://www.archive.org/details/transvaal00devi. பார்த்த நாள்: 2009-07-30.
  15. Great Britain. Colonial Office; Transvaal (Colony). Governor (1901-1905: Milner) (January 1902). Papers relating to legislation affecting natives in the Transvaal. His Majesty's Stationery Office. http://www.archive.org/details/transvaalpapersr00grea.
  16. தென்னாப்பிரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது
  17. "HDI". UNDP.
  18. Wymer, John; Singer, R (1982). The Middle Stone Age at Klasies River Mouth in South Africa. Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0226761037.
  19. Deacon, HJ (2001). "Guide to Klasies River". Stellenbosch University. பார்த்த நாள் 2009-09-05.
  20. "Fossil Hominid Sites of Sterkfontein, Swartkrans, Kromdraai, and Environs".
  21. Stephen P. Broker. "Hominid Evolution". Yale-New Haven Teachers Institute. பார்த்த நாள் 2008-06-19.
  22. "சாகா: சூலு தலைவர்". HistoryNet.
  23. சாகா (சூலு தலைவர்). என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.
  24. Williams, Garner F (1905). The Diamond Mines of South Africa, Vol II. New York, New York: B. F Buck & Co.. பக். Chapter XX. http://www.farlang.com/diamonds/williams_diamond_mines_2/page_285.
  25. "Native Land Act". South African Institute of Race Relations (1913-06-19).
  26. "Post-Apartheid South Africa: the First Ten Years - Unemployment and the Labor Market". IMF.
  27. http://www.mg.co.za/article/2008-04-18-zuma-surprised-at-level-of-white-poverty
  28. "South Africa". Human Development Report. United Nations Development Programme (2006). பார்த்த நாள் 2007-11-28.
  29. "Ridicule succeeds where leadership failed on AIDS". South African Institute of Race Relations (10 November 2006).
  30. Pamela Snyman and Amanda Barratt (2002-10-02). "Researching South African Law". Library Resource Xchange. பார்த்த நாள் 2008-06-23.
  31. "Article by Imran Buccus in the Mercury newspaper".
  32. மோ இப்ராஹிம் ஃபவுண்டேஷன். 2010-01-11 ஆம் ஆண்டில் பெறப்பட்டது.
  33. "Chapter 6 - Provinces". Constitution of the Republic of South Africa. Government of South Africa (1996). பார்த்த நாள் 2009-09-04.
  34. Burger, Delien, தொகுப்பாசிரியர் (2009). "The land and its people". South Africa Yearbook 2008/09. Pretoria: Government Communication & Information System. பக். 7–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-621-38412-3. http://www.gcis.gov.za/resource_centre/sa_info/yearbook/2009/chapter1.pdf. பார்த்த நாள்: 23 September 2009.
  35. "Community Survey 2007: Basic results" (PDF). Statistics South Africa. பார்த்த நாள் 23 September 2009.
  36. Rosalind Rosenberg (Summer 2001). "Virginia Gildersleeve: Opening the Gates (Living Legacies)". Columbia Magazine. http://www.columbia.edu/cu/alumni/Magazine/Summer2001/Gildersleeve.html.
  37. Schlesinger, Stephen E. (2004). Act of Creation: The Founding of the United Nations: A Story of Superpowers, Secret Agents, Wartime Allies and Enemies, and Their Quest for a Peaceful World. Cambridge, MA: Westview, Perseus Books Group. பக். 236–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8133-3275-3.
  38. "Constitution of the Republic of South Africa Act 200 of 1993 (Section 224)". South African Government (1993). பார்த்த நாள் 2008-06-23.
  39. Col L B van Stade, Senior Staff Officer Rationalisation, SANDF (1997). "Rationalisation in the SANDF: The Next Challenge". Institute for Security Studies. பார்த்த நாள் 2008-06-23.
  40. "Defence Act 42 of 2002" 18. South African Government (2003-02-12). பார்த்த நாள் 2008-06-23.
  41. Mosiuoa Lekota (2005-09-05). "Address by the Minister of Defence at a media breakfast at Defence Headquarters, Pretoria". Department of Defence. பார்த்த நாள் 2008-06-23.
  42. Lieutenant Colonel Roy E. Horton III (BS, Electrical Engineering; MS, Strategic Intelligence) (October 1999). "Out of (South) Africa: Pretoria's Nuclear Weapons Experience". USAF Institute for National Security Studies. பார்த்த நாள் 2008-06-23.
  43. Christine Dodson (1979-10-22). "South Atlantic Nuclear Event (National Security Council, Memorandum)" (PDF). George Washington University under Freedom of Information Act Request. பார்த்த நாள் 2008-06-23.
  44. "Country Comparison". World Factbook. CIA.
  45. "SouthAfrica.info: South Africa's geography".
  46. நாடுகள் மூலமான உலகின் உயிரினப் பரவல்
  47. தென்னாப்பிரிக்காவில் தாவரங்களும் தாவர வளர்ப்பும், தென்னாப்பிரிக்கா ஆன்லைன் சுற்றுலா வழிகாட்டி.
  48. தென்னாப்பிரிக்க தேசிய உயிரினப்பரவல் நிறுவனம்.
  49. எஸ்ஏஆர்பிஎன் - தென்னாப்பிரிக்கா www.sarpn.org.za ஆம் ஆண்டில்
  50. "Black middle class boosts car sales in South Africa: Mail & Guardian Online".
  51. ரேஸ் அகெய்ன்ஸ்ட் டைம். தி அப்சர்வர். ஜனவரி 22, 2006
  52. "Economic Assessment of South Africa 2008". OECD.
  53. "Economic Assessment of South Africa 2008: Achieving Accelerated and Shared Growth for South Africa". OECD.
  54. "SA Economic Research - Tourism Update" (PDF). Investec (October 2005). பார்த்த நாள் 2008-06-23.
  55. "African Security Review Vol 5 No 4, 1996: Strategic Perspectives on Illegal Immigration into South Africa".
  56. "Queens College: The Brain Gain: Skilled Migrants and Immigration Policy in Post-Apartheid South Africa".
  57. "South Africa". The World Factbook. CIA.
  58. "பவர் ஃபெயிலியர் அவுட்ரேஜ் சவுத் ஆப்பிரிக்கா" கட்டுரை பேரி பாரக் மற்றும் செலியா டபிள்யு. டக்கர் தி நியூயார்க் டைம்ஸ் ஆம் ஆண்டில் 31 ஜனவரி 2008
  59. "S Africa cuts power to neighbours". BBC News. 21 January 2008. http://0-news.bbc.co.uk.innopac.up.ac.za:80/2/hi/africa/7199814.stm. பார்த்த நாள்: 2008-04-20.
  60. "Eskom reopens 3 power stations". News24. 14 February 2008. http://www.news24.com/News24/South_Africa/Power_Crisis/0,,2-7-2335_2270747,00.html. பார்த்த நாள்: 2009-05-14.
  61. "Eskom mulls new power stations". Fin24. 18 September 2008. http://www.fin24.com/articles/default/display_article.aspx?Nav=ns&ArticleID=1518-24_2395323. பார்த்த நாள்: 2009-05-14.
  62. மனித உரிமைகள் கண்கானிப்பகம், 2001. அனீக்வல் புரடக்ஷன்: தி ஸ்டேட் ரெஸ்பான்ஸ் டு வயலண்ட் கிரைம் ஆன் சவுத் ஆப்பிரிக்கன் ஃபார்ம்ஸ், ISBN 1-56432-263-7.
  63. மொகமத், நஜ்மா. 2000. "கிரீனிங் லேண்ட் அண்ட் அக்ரேரியன் ரிஃபார்ம்: எ கேஸ் ஃபார் சப்ஸ்டெயினபிள் அக்ரிகல்ச்சர்", அட் தி கிராஸ்ரோட்ஸ்: லேண்ட் அண்ட் அக்ரேரியன் ரிஃபார்ம் இன் சவுத் ஆப்பிரிக்கா இன்டு 21ஸ்ட் சென்ச்சுரி , பதிப்பு. கஸின்ஸ், பென். பெல்வில்லே, அரசுப் பள்ளி, வெஸ்டர்ன் கேப் பல்கலைக்கழகம். ISBN 1-86808-467-1.
  64. "Agriculture". South Africa Online. பார்த்த நாள் 2006-07-17.
  65. "காங்கோ தென்னாப்பிரிக்கர்களிடம் நிலத்தை கையளித்திருக்கிறது". டெலகிராஃப் அக்டோபர் 21, 2009
  66. தென்னாப்பிரிக்காவின் கசப்பான சாகுபடி.
  67. நிலத்திற்காக தென்னாப்பிரிக்கர்களின் நீண்டகால காத்திருப்பு, பிபிசி நியூஸ்.
  68. எஸ்ஏ டு லியர்ன் ஃப்ரம் லேண்ட் சீஸர்ஸ், பிபிசி நியூஸ்.
  69. Bronwen Manby (August 2001). Unequal Protection - The State Response to Violent Crime on South African Farms. Human Rights Watch. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56432-263-7. http://www.hrw.org/reports/2001/safrica2/. பார்த்த நாள்: 2006-10-28.
  70. ஃபார்ம்ஸ் ஆஃப் ஃபியர், தி சண்டே டைம்ஸ் மேகசின்.
  71. ஆப்பிரிக்கர்களை 'தண்ணீர் அகதிகளாக' உருவாக்கும் பருவநிலை மாற்றம் – அறிவியலாளர்கள், ராய்ட்டர்ஸ் ஆல்டர்நெட். அனுகப்பட்டது 21 செப்டம்பர் 2006].
  72. விவசாயத் தென்னாப்பிரிக்கத் துறை.
  73. தி சிஓடு ஃபெர்டிலைஸர் எஃபெக்ட்: ஹையர் கார்போஹைட்ரேட் புரடக்ஸன் அண்ட் ரிடன்ஷன் அஸ் பயோமாஸ் அண்ட் சீட் யீல்டு. 2010-01-11 ஆம் ஆண்டில் பெறப்பட்டது.
  74. தென்னாப்பிரிக்காவில் பருவநிலை மாற்றத்தின் பொருளாதார தாக்கங்கள்: கடுமை குறைக்கப்படாத சேதச் செலவினங்களின் முதல்நிலைப் பகுப்பாய்வு, ஜே. துர்பி மற்றும் சிலர். 2002 அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வுகள் நிறுவனத்திற்கான கூட்டு மையம். தெற்கு தண்ணீர் சூழியல் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மற்றும் ஆற்றல் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையம். 64 பக்கங்கள்.
  75. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2001, தென்னாப்பிரிக்க புள்ளியியல் அமைப்பு.
  76. "Midyear population estimates, South Africa". Statistics South Africa (2006). பார்த்த நாள் 2007-11-28.
  77. "statssa.gov.za" (PDF).
  78. "The demographic status of the world's population". Global Statistics. GeoHive.
  79. "Anti-immigrant violence spreads in South Africa, with attacks reported in Cape Town". மூல முகவரியிலிருந்து 2008-06-07 அன்று பரணிடப்பட்டது.
  80. "Escape From Mugabe: Zimbabwe's Exodus".
  81. "More illegals set to flood SA".
  82. "South African mob kills migrants". BBC (2008-05-12). பார்த்த நாள் 2008-05-19.
  83. Barry Bearak (23 May 2008). "Immigrants Fleeing Fury of South African Mobs". New York Times. http://www.nytimes.com/2008/05/23/world/africa/23safrica.html?_r=1&ref=africa&oref=slogin. பார்த்த நாள்: 2008-08-05.
  84. மில்லியன் வெள்ளையினத்தவர்கள் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறியிருக்கின்றனர்- ஆய்வு
  85. யுனிஸா.
  86. பாலிசி சீரிஸ், குயின்ஸ் பல்கலைக்கழகம்.
  87. தி எகனாமிஸ்ட்.
  88. "Rhodie oldies". New Internationalist (1985). பார்த்த நாள் 2007-10-29.
  89. தற்போதைய ஆப்பிரிக்க இனக் கலவரங்கள் 1949 ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு எதிரானதைப் போன்று இருக்கிறது: அமைச்சர். TheIndianStar.com. மே 26, 2008.
  90. http://www.salon.com/tech/htww/2008/06/19/chinese_declared_black/ Chinese declared black
  91. நீங்கள் கறுப்பினத்தவர்கள் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், தென்னாப்பிரிக்க நீதிமன்றம் சீனர்களிடம் கூறியது, தி டைம்ஸ்
  92. "World Refugee Survey 2008". U.S. Committee for Refugees and Immigrants. 2008-06-19. http://www.refugees.org/survey.
  93. மெகாலோபோலிஸ்_%28நகரம்_வகை%29#ஆப்பிரிக்கா
  94. "HIV & Aids in South Africa". Avert. பார்த்த நாள் 2006-10-08.
  95. ""Sack SA Health Minister" – world's AIDS experts". afrol News. பார்த்த நாள் 2006-10-08.
  96. "info.gov.za" (PDF).
  97. "AIDS orphans". Avert. பார்த்த நாள் 2006-10-08.
  98. "thewinedoctor.com".
  99. "Black middle class explodes". FIN24. 22 May 2007. http://www.fin24.co.za/articles/default/display_article.aspx?Nav=ns&ArticleID=1518-25_2117122.
  100. "History of Scouting in South Africa". History of Scouting in South Africa. South African Scout Association (2006). பார்த்த நாள் 2006-11-30.
  101. "South African music after Apartheid: kwaito, the "party politic," and the appropriation of gold as a sign of success".
  102. "South Africa - Section I. Religious Demography". U.S. Department of State. பார்த்த நாள் 2006-07-15.
  103. தென்னாப்பிரிக்காவில் தேவாலய உறுப்பினர் புள்ளிவிவர விவாதத்திற்கு பார்க்கவும் ஃபார்ஸ்டர், டி."எங்கள் சூழ்நிலையில் கடவுளின் செயல்திட்டம் ஆற்றுதலும் பதிலுரைப்புகளை மாற்றித்தருதலும்" ஃபார்ஸ்டர் டி மற்றும் பென்ட்லே, டபிள்யு மெத்தடிஸம் இன் சவுத் ஆப்பிரிக்கா: எ செலிப்ரேஷன் ஆஃப் வெஸ்லேயன் மிஷன் . கெம்டன் பார்க். AcadSA பப்ளிஷர்ஸ் (2008:97-98)
  104. அரசுத் துறை, அமெரிக்கா.
  105. "In South Africa, many blacks convert to Islam".
  106. "Muslims say their faith growing fast in Africa".
  107. தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு, அத்தியாயம் 1, பிரிவு 6
  108. http://hdrstats.undp.org/en/countries/data_sheets/cty_ds_ZAF.html
  109. "NationMaster: South African Crime Statistics".
  110. கொடுமைப்படுத்தப்பட்ட வெள்ளையின தென்னாப்பிரிக்கர் பிராண்டன் ஹண்ட்லே பன்னாட்டு இன அகதியாகியிருக்கிறார். டைம்ஸ் ஆன்லைன். செப்டம்பர் 3, 2009
  111. தென்னாப்பிரிக்காவின் ரெக்கே கொலைக்குப் பின்னால். டைம் . அக்டோபர் 22, 2007.
  112. "சவுத் ஆப்பிரிக்கா: ஒன் இன் ஃபோர் மென் ரேப்". ஐஆர்ஐஎன் ஆப்பிரிக்கா. ஜூன் 18, 2009
  113. வன்புணர்ச்சி- தென்னாப்பிரிக்கா பெண்கள் மீது சத்தமில்லாத போர்
  114. தென்னாப்பிரிக்காவின் கற்பழிப்பு அதிர்ச்சி
  115. ஓப்ரா விவகாரம் தென்னாப்பிரிக்காவை உலுக்கியிருக்கிறது
  116. "Farms of fear". The Times Online. 2 April 2006. http://www.timesonline.co.uk/tol/life_and_style/article694534.ece.
  117. http://jae.oxfordjournals.org/cgi/content/abstract/13/suppl_2/ii15 World Bank, IMF study 2004
  118. http://www.equinetafrica.org/bibl/docs/healthpersonnel.pdf Health Personnel in Southern Africa: Confronting maldistribution and brain drain
  119. வளரும் நாடுகளிலிருந்து திறமைபெற்ற உழைப்பாளர்களின் புலம்பெயர்வு: தென் மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா குறித்த ஆய்வு , ஹரூன் போரத் மற்றும் சிலர். 2002 சர்வதேச புலம்பெயர் திட்டம், சர்வதேச தொழிலாளர் அலுவலகம், ஜெனிவா.
  120. மே 2008 ஆம் ஆண்டு கொலை கொள்ளைகள் குறித்து பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு

கூடுதல் வாசிப்பு

  • எ ஹிஸ்டரி ஆஃப் சவுத் ஆப்பிரிக்கா, மூன்றாவது பதிப்பு . லியானார்ட் தாம்ஸன். யேல் யுனிவர்சிட்டி பிரஸ். 1 மார்ச் 2001. 384 பக்கங்கள். ISBN 0-300-07754-8
  • எமர்ஜிங் ஜோகானஸ்பேர்க்: பெர்ஸ்பெக்டிவ் ஆன் தி போஸ்ட் அபர்தைட் சிட்டி . ரிச்சர்ட் தாம்லின்ஸன், இன்ன பிறர். 1 ஜனவரி 2003. 336 பக்கங்கள். ISBN 0-415-92560-6.
  • மேக்கிங் ஆஃப் மாடர்ன் சவுத் ஆப்ரிக்கா: கான்கஸ்ட், செக்ரகேஷன் அண்ட் அபர்தைட் . நைஜில் வோர்டன். 1 ஜுலை 2000. 194 பக்கங்கள். ISBN 0-631-21661-8.
  • ரிலீஜியன் அண்ட் பாலிடிக்ஸ் இன் சவுத் ஆப்பிரிக்கா. டேவிட் ஹெய்ன். மாடர்ன் ஏஜ் 31 (1987): 21–30.
  • சவுத் ஆப்பிரிக்கா: எ நேரேட்டிவ் ஹிஸ்டரி . ஃபிராங்க் வெல்ஷ். கொடான்ஷா அமெரிக்கா. 1 பிப்ரவரி 1999. 606 பக்கங்கள். ISBN 1-56836-258-7.
  • சவுத் ஆப்பிரிக்கா இன் கண்டெம்பரரி டைம்ஸ் . காட்ஃபிரே வகிகாகிலே. நியூ ஆப்பிரிக்கா பிரஸ். பிப்ரவரி 2008. 260 பக்கங்கள். ISBN 978-0-292-73061-8
  • தி அட்லஸ் ஆஃப் சேன்ஜிங் சவுத் ஆப்பிரிக்கா . ஏ. ஜே. கிறிஸ்டோபர். 1 அக்டோபர் 2000. 216 பக்கங்கள். ISBN 0-415-92560-6.
  • தி பாலிடிக்ல் ஆஃப் நியூ சவுத் ஆப்பிரிக்கா . ஹெதர் டீகன். 28 டிசம்பர் 2000. 256 பக்கங்கள். ISBN 0-582-38227-0.
  • டிவெண்டித் சென்ச்சுரி சவுத் ஆப்பிரிக்கா . வில்லியம் பெர்னார்ட் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் 2001, 414 பக்கங்கள், ISBN 0-19-289318-1
  • தி டயமண்ட் மைன்ஸ் ஆஃப் சவுத் ஆப்பிரிக்கா . கார்ட்னர் எஃப். வில்லியம்ஸ், டிபீர்ஸ் ஜெனரல் மேனேஜர், பக் & கோ, 1905, 845 பக்கங்கள், தொகுப்பு I மற்றும் II. ஆன்லைன் முழு உரை பதிப்பு: டயமண்ட் மைன்ஸ் தொகுப்பு. I மற்றும் டயமண்ட் மைன்ஸ் தொகுப்பு. II

வெளிப்புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.